Tenkasi

News April 8, 2025

சிவகிரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

சிவகிரி பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் தென்காசி – மதுரை சாலையில் வாகன தணிக்கை செய்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்த போது, சிவகிரி உள்ளாரை சேர்ந்த பூலித்துரை மகன் காசித்துரை என்ற கார்த்திக் காரில் சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 8, 2025

அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

image

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கு www.icds.tn.gov.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

News April 7, 2025

பைக் விபத்தில் மனைவி பலி 

image

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே காக்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி கலா(50). இருவரும் இன்று இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் சென்று கொண்டிருந்த போது எதிரே பொன் பாண்டியன் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 6, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

ஆய்க்குடி உலகம்மன் திருக்கோயில்

image

தென்காசி, ஆய்க்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு உலகம்மன் திருக்கோயில். நினைத்ததை வேண்டி விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். சித்திரை, பங்குனி நாட்கள் இங்கு சிறப்பு வாய்ந்த நாட்களாகும். இங்கு வேண்டினால் குழந்தை பிரச்சனை, கடன் பிரச்சனை , குடும்ப பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 6, 2025

தென்காசியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News April 6, 2025

தென்காசி: 15,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் சுகாதார உதவியாளர்கள் பணிக்கு மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவை இல்லை. விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்*

News April 5, 2025

தென்காசி மாவட்ட இரவில் ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 05.04.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.

News April 5, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-5) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2025

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்துள்ளார் தொடர்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சுரண்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!