Tenkasi

News April 12, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2025

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தென்காசியில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மே.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 12, 2025

தென்காசி: உங்கள் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள், புகார்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம். திருவேங்கடம் தாசில்தார் – 7708613515 , சங்கரன்கோவில் – 9445000670 , சிவகிரி – 9445000679, ஆலங்குளம் – 9445000678 , வீரகேரளம்புதூர் – 9445000677, கடையநல்லூர் – 9442224212, செங்கோட்டை தாசில்தார் -9445000676, தென்காசி தாசில்தார் – 9445000675. *SHARE IT*

News April 12, 2025

ரூ 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது

image

தென்காசி, கடையம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆய்வாளர் மேரி ஜேமிதா என்பவர், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம்  ஆள் கடத்தல் வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி  ரூ.30ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  மேரி ஜெமிதாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 12, 2025

BREAKING தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் தென்காசி, குமரி,நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

News April 12, 2025

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குத்துக்கல் வலசையில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <>க்ளிக்<<>> செய்து முன்பதிவு செய்யவும் *வேலை தேடும் நண்பர்கள்,உறவினர்களுக்கு ஷேர் செய்யவும்*

News April 12, 2025

தென்காசி: கரிசல் குயில் கிருஷ்ணசாமி காலமானார்

image

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் மக்களுக்கான முற்போக்கு பாடல்களை பாடித்திரிந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி நேற்று (ஏப்-11) காலமானார். தனது இனிமையான குரல் வளத்தால் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் கரிசல் குயில் இசைக்குழுவை கொண்டு சென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் எழுத்தாளர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 11, 2025

தென்காசி: தங்கத்தேர் உள்ள முருகன் கோவில் – தெரியுமா?

image

தென்காசி மாவட்டத்தில் தங்கத் தேர் உள்ள முருகன் கோவில் செங்கோட்டை அருகே பண்பொழி மலை மேல் உள்ள திருமலை குமரன் கோவிலில் மட்டும் தான் தங்கத்தேர் உள்ளது. விசேஷ தினங்களில் தங்கத் தேர் இழுக்கப்படும் மேலும் பக்தர்கள் குடும்பத்துடன் கட்டணம் ரூபாய் 1,200 செலுத்தினால் பக்தர்களே தங்கள் கைகளால் தங்கத் தேரை வடம் பிடித்து இழுக்கலாம், தமிழக மட்டுமின்றி கேரள பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய கோவிலாகும்.

News April 11, 2025

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் பணி 

image

தென்காசி மாவட்டத்தில் சத்துணவுமையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் மாவட்ட ஆட்சியர் தகவல் பணியில் ஈடுபடுவோருக்கு மாதம் ரூ.3000/- தொகுப்பூதியமும். ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000 – 9000)) ஊதியம் வழங்கப்படும். (கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி) விண்ணப்பத்தினை ஏப்.25ம் தேதிக்குள் அப்பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.

error: Content is protected !!