Tenkasi

News April 14, 2025

தென்காசியில் பண மோசடி குறித்து விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தென்காசி மாவட்ட மக்களுக்கு பண மோசடி குறித்து OTP யாரும் கேட்டால் சொல்ல கூடாது என தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக ஊடக வழித்தலங்களில் படவரி பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. *ஷேர்

News April 14, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் நீடிப்பு

image

திருநெல்வேலியில் இருந்து தென்காசி, கடையநல்லூர் ராஜபாளையம் விருதுநகர் வழியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13ஆம் தேதி இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

News April 13, 2025

தென்காசியில் அனைத்து சமுதாய மக்கள் செல்லும் கிறிஸ்தவ ஆலயம் 

image

தென்காசி நகராட்சி மார்க்கெட் அருகே புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தேர்பவனி திருவிழாவில் கிறிஸ்தவ பெருமக்கள் தவிர அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் கேரளாவிலிருந்து அதிகப்படியான மக்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருவர். சர்ச் அருகே இந்து கோயில் திருவிழா நடக்கும் சமயத்தில் பக்தர்கள் பெரும்பாலும் இந்த ஆலயத்தில் தான் தங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர்

News April 13, 2025

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

தென்காசி: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE IT!

News April 13, 2025

தென்காசி: 16 கரங்களுடன் நரசிம்மர் ஆலயம் எங்கே தெரியுமா

image

தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது. நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில்,16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் நீண்ட கால துன்பங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.*ஷேர்*

News April 13, 2025

குழந்தை வரம் வேண்டி பாயாசம் நேர்த்திக்கடன் – எங்கே தெரியுமா?

image

தென்காசி மாவட்டம், ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் தளமான பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதம் மேற்கொள்பவர்கள் அங்குள்ள அனுமன் நதி கரையில் படி பாயாசம் சாப்பிட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

News April 13, 2025

சிற்றாற்றில் பாறையில் தவறி விழுந்த ஒருவர் பலி

image

தென்காசி, வீரகேரளம்புதூரில் சிற்றாறில் சாமி கும்பிட கோவில்பட்டியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் குடும்பத்துடன் வந்துள்ளார். அவர் நேற்று (ஏப்-12) சிற்றாறில் குளிக்கும் போது பாறையில் தவறி விழுந்து பலியானார். காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சுரண்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். 

News April 12, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!