India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குளம் எஸ்ஐ சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ராசையா மகன்கள் இசக்கிமுத்து(26), கருத்தப்பாண்டி(22) என்பதும், அவர்கள் 2 வாள்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. SI விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
சி.பா.ஆதித்தனார் தூத்துக்குயில் உள்ள காயாமொழி என்னும் ஊரில் 1905ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே இவருக்கு எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆர்வமிருந்தது. சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதும் 1942ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். பின்னர் இந்த இதழ் தடை செய்யப்பட்டது. பின்னர் நவ.1 1942ல் தினந்தந்தி நாளிதழை துவங்கினார். இந்த இதழ் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. Share It.
முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடனா மற்றும் குண்டாறு ஆகிய நீர் தேக்கங்களின் மீன் பாசி ஏலம் அறிவிப்பு நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9788293060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆக்கவுண்டன்ட்,கேஷியர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ, டிகிரி படித்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 62. இவரை வீடு தேடிச் சென்று நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். குற்றவாளிகள் பாலாஜி, பாலமுருகன், சுபாஷ், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை அச்சன்புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் சைவ சமய பெரியோர், நாயன்மார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் குற்றாலநாத சுவாமிக்கு ஏற்படும் தலைபாரத்தை நீக்க ஒவ்வொரு ஆண்டும் 48 மூலிகைகளால் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் காய்ச்சப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலம் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
தென்காசி மாவட்டம் மேக்கரையில் 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 32.50அடி ,72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 25 . 92 அடி ,36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 24 அடி , 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 54 அடி .85 முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 52 அடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் கோடை கால விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம், விளையாட்டு போட்டிகள் ஏப்.21 முதல் மே 5 வரை நடைபெறவுள்ளது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட் இலவசமாக பயிற்சியளிக்கப்படவுள்ளது. 63691107840, 9585713337, 9486511103 என்ற எண்ணில் முன்பதிவு செய்திடும் படி கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.