Tenkasi

News February 1, 2025

30 குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கிய கலெக்டர்

image

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பெற்றோர் இருவரையும் இழந்த 15 குழந்தைகளுக்கும், ஊனமுற்ற 02 குழந்தைகளுக்கும், ஊனமுற்ற பெற்றோர்களின் 02 குழந்தைகளுக்கும், சிறைவாசிகளின் 02 குழந்தைகளுக்கும், பெற்றோரால் கைவிடப்பட்ட 06 குழந்தைகள் ஆகியோர்களுக்கு தலா ரூ.10,000/-த்தை கலெக்டர் வழங்கினார்.

News February 1, 2025

தென்காசி மக்களே தினமும் ரூ.500 பெற வாய்ப்பு

image

தென்காசி மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 9629670206 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசெஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <>(இங்கே கிளிக் செய்து)<<>> உங்கள் தகவல்களை பகிரலாம். *செய்தி ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்*

News February 1, 2025

மூத்த நிர்வாகியிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர்

image

தென்காசி மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்ற ஆனந்தன் அய்யாசாமி இன்று(பிப்.1) பாஜக ஒருங்கிணைந்த நெல்லை மேற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணி செய்த மூத்த நிர்வாகி பாண்டித்துரையை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட ஒன்றிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.

News February 1, 2025

தென்காசி அருகே கொலை; 10 ஆண்டு சிறை 

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மங்கம்மா சாலை பகுதியை சேர்ந்தவர் தங்க செல்வியை, அதே பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் ஆல்பர்ட் ரமேஷ் முன் விரோதம் காரணமாக 2016 ஆம் ஆண்டு கொலை செய்தார் .இந்த வழக்கு தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த போது குற்றவாளி ஜெபஸ்டின் ஆல்பர்ட் ரமேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News February 1, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இன்று (31.01.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொலைப்பேசி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633-295455, 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 31, 2025

தென்காசி மாவட்டத்தில் மின்தடை இல்லை

image

தென்காசி மாவட்டத்தில் நாளை (பிப்.,1) பராமரிப்பு பணி காரணமாக தென்காசி, கடையம், சுரண்டை, சாம்பவர் வடகரை, புளியங்குடி, செங்கோட்டை, கீழப்பாவூர், ஊத்துமலை, சங்கரன்கோவில் டவுண், ஆலங்குளம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வழக்கம் போல் மின்விநியோகம் நடைபெறும். *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிர்ந்து தெரிய படுத்தவும்*

News January 31, 2025

தென்காசி பெண்ணை வன்புணர்வு செய்த போலீஸ் கைது

image

சிவகிரி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சைலேஷ் என்ற காவலரையும், மோகன் என்ற அரசு பேருந்து ஓட்டுநரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் என்ற மற்றொரு காவலரை இன்று சுற்றி வளைத்து பிடித்தனர்.*போலீஸின் இந்த செயல் பற்றி உங்கள் கருத்து?

News January 31, 2025

தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் நியமனம்

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் 2-ம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியலை சட்டமன்ற தொகுதி வாரியாக அக்கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் இன்று (ஜனவரி 31 ) அறிவித்துள்ளார். அதன்படி தென்காசி தொகுதி சேகர், ஆலங்குளம் கார்த்திக், கடையநல்லூர் செல்வராஜ் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

தென்காசி மாவட்ட தலைவராக நயினார் முஹம்மது நியமனம்

image

தமிழ்நாடு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் ஜவாஹிருல்லா அப்துல் சமது ஆகியோர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் ஆலோசனையின் படி மனிதநேய மக்கள் கட்சியை தென்காசி மாவட்ட தலைவராக நயினார் முகமது இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

News January 31, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (ஜன.30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!