India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பெற்றோர் இருவரையும் இழந்த 15 குழந்தைகளுக்கும், ஊனமுற்ற 02 குழந்தைகளுக்கும், ஊனமுற்ற பெற்றோர்களின் 02 குழந்தைகளுக்கும், சிறைவாசிகளின் 02 குழந்தைகளுக்கும், பெற்றோரால் கைவிடப்பட்ட 06 குழந்தைகள் ஆகியோர்களுக்கு தலா ரூ.10,000/-த்தை கலெக்டர் வழங்கினார்.
தென்காசி மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 9629670206 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசெஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <
தென்காசி மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்ற ஆனந்தன் அய்யாசாமி இன்று(பிப்.1) பாஜக ஒருங்கிணைந்த நெல்லை மேற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணி செய்த மூத்த நிர்வாகி பாண்டித்துரையை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட ஒன்றிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மங்கம்மா சாலை பகுதியை சேர்ந்தவர் தங்க செல்வியை, அதே பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் ஆல்பர்ட் ரமேஷ் முன் விரோதம் காரணமாக 2016 ஆம் ஆண்டு கொலை செய்தார் .இந்த வழக்கு தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த போது குற்றவாளி ஜெபஸ்டின் ஆல்பர்ட் ரமேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இன்று (31.01.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொலைப்பேசி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633-295455, 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நாளை (பிப்.,1) பராமரிப்பு பணி காரணமாக தென்காசி, கடையம், சுரண்டை, சாம்பவர் வடகரை, புளியங்குடி, செங்கோட்டை, கீழப்பாவூர், ஊத்துமலை, சங்கரன்கோவில் டவுண், ஆலங்குளம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வழக்கம் போல் மின்விநியோகம் நடைபெறும். *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிர்ந்து தெரிய படுத்தவும்*
சிவகிரி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சைலேஷ் என்ற காவலரையும், மோகன் என்ற அரசு பேருந்து ஓட்டுநரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் என்ற மற்றொரு காவலரை இன்று சுற்றி வளைத்து பிடித்தனர்.*போலீஸின் இந்த செயல் பற்றி உங்கள் கருத்து?
தென்காசி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் 2-ம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியலை சட்டமன்ற தொகுதி வாரியாக அக்கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் இன்று (ஜனவரி 31 ) அறிவித்துள்ளார். அதன்படி தென்காசி தொகுதி சேகர், ஆலங்குளம் கார்த்திக், கடையநல்லூர் செல்வராஜ் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் ஜவாஹிருல்லா அப்துல் சமது ஆகியோர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் ஆலோசனையின் படி மனிதநேய மக்கள் கட்சியை தென்காசி மாவட்ட தலைவராக நயினார் முகமது இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (ஜன.30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.