India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் அடைச்சாணியைச் சேர்ந்த மாரிமுத்து (30), துப்பாக்குடி டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது வேல்முருகன், பட்டுசாமி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் அவரிடம் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர். தகராறு கைகலப்பாக மாறியதில், மூவரும் மதுபாட்டிலால் மாரிமுத்துவைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். காயமடைந்த பட்டுசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள திருமலாபுரத்தில் மலையை குடைந்து பசுபதிசுவரர் குடைவரை கோவில் உள்ளது .இந்த கோவில் 1200 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.இந்த கோவிலில் லிங்க வடிவத்தில் சிவன் காட்சியளிக்கிறார்.பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது .இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் புதிய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை நேரில் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா மே 1-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை ஏப். 30 யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கோவில் யானை கோமதியுடன் சென்று பிடி மண் எடுத்து விட்டு கோவிலுக்கு திரும்புவர். 9ம் திருநாளான மே 9 இல் தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படித்தார்கள் செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரத்தில் வனமூர்த்தி சாஸ்தா கோவிலில் நாளை கோவில் கொடை விழா நடைபெற உள்ளது .இதற்காக கடையம் பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக ஆட்டோ இயக்கப்படுகிறது. பக்தர்கள் 9443086710 தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொண்டு வருகை தருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது .
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நேருஜி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் 36 இவர் நேற்று காலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மகேந்திரன் தீராத முதுகு வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவர் எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்தது .தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்திய ராணுவத்திற்கு நிதியளிக்குமாறு வாட்ஸ் அப்பில் பரவி வந்த செய்திக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் தவறான தகவல் உலாவி வருவதை சுட்டிக்காட்டி பொதுமக்கள் இது போன்ற மோசடி தகவலை நம்ப கூடாது என்று விளக்கம் அளித்துள்ளது. எனவே தென்காசி மக்கள் இதுபோன்ற தவறான செய்தி வந்தால் தவிர்க்கவும்.
தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி பிற்பகல் 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள்அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்துக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.