Tenkasi

News February 21, 2025

தென்காசி பகுதியில் ராணி ஸ்ரீ குமார் எம்பி நன்றி அறிவிப்பு

image

தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி மேற்கு ஒன்றிய பகுதிகளான வல்லம், பண்பொழி உள்ளிட்ட இடங்களில் நேற்று(பிப்.26) வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார். அப்போது தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா மற்றும் திமுகநிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News February 21, 2025

காசியில் மாயமான பெண்கள் தென்காசி திரும்பினர்!

image

தென்காசியில் இருந்து காசிக்கு புனிதயாத்திரை சென்றவர்களில் கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி, கஸ்தூரி ஆகிய 2 பெண்கள் பிப்.18ஆம் தேதி திடீரென மாயமாகினர். இதை தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அங்குள்ள போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் இன்று(பிப்.21) காலை தென்காசி வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் நிலையில், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 21, 2025

சங்கரன்கோவில் அருகே இன்று புத்தர் கோயில் கோபுரம் திறப்பு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு புத்தர் கோயில்(உலக அமைதிக்கான) கோபுரம் காலை இன்று(பிப்.21) திறக்கப்படுகிறது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சியர், சிவகங்கை ராணி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் என புத்தர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2025

முதல்வரை சந்தித்த தென்காசி முன்னாள் எம்.பி

image

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளராக தென்காசி முன்னாள் எம்பி தனுஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று (பிப்.20) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. அமைப்பு செயலாளர் .ஆர்.எஸ்.பாரதி உடன் இருந்தனர்.

News February 20, 2025

தென்காசியில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனையின்படி தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நாளை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் நீதிமன்ற புறக்கணிப்பு ஈடுபட உள்ளனர். வழக்கறிஞர்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காக உறுதி செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

News February 20, 2025

உள்ளூர் விடுமுறை: ஆட்சியருக்கு Ex. மாவட்ட செயலர் கோரிக்கை

image

தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தென்காசி தெற்கு மாவட்ட Ex.திமுக செயலாளர் சிவபத்மநாதன் இன்று அனுப்பிய மனுவில், “அய்யா வைகுண்டரின் 193வது பிறந்த தின விழா மார்ச் 4ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவையொட்டி தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் அரசு விடுமுறை அளித்திட வேண்டும்” என கூறியுள்ளார்.

News February 20, 2025

கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய காவலர் சஸ்பெண்ட்

image

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் திருவேங்கடம் அருகே உள்ள உவமைத்தலைவன்பட்டி கிராமத்தில் நள்ளிரவில் அத்துமீறி ஒரு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவரை ஊர் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது அறிந்து திருவேங்கடம் போலீசார் விரைந்து சென்று காவலரை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News February 20, 2025

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்

image

தென்காசி நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜா முகமது. இவர் நகராட்சி பணத்தை கையாடல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், நகராட்சி பணம் ரூ.28 லட்சம் கையாடல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்த சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News February 20, 2025

தென்காசி: காசிக்கு சென்று மாயமான பெண்களின் புகைப்படம்!

image

தென்காசியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 40 பேர் கொண்ட குழு காசிக்கு புனித யாத்திரை சென்றது. இதில் 10 பேர் தென்காசி பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த 13ஆம் தேதி புறப்பட்டுச் சென்வர்கள் 18ஆம் தேதி காசியில் இருந்து அயோத்தி சென்றுள்ளனர். இருந்தபோது கஸ்தூரி, ஆதிலட்சுமி ஆகியோர் மாயமாகி உள்ளனர். காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மாயமானவர்களின் படங்கள் வெளியாகியுள்ளது.

News February 20, 2025

தென்காசியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5வது சுற்று புருசெல்லாஸ் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. முகாமானது இன்று(பிப்.20) முதல் மார்ச் 19ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் கிடேறி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(பிப்.19) அறிவுறுத்தியுள்ளார். SHARE IT.

error: Content is protected !!