India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தாய்ப்பால் வார விழாவின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஆலோசகர் (யோகா & இயற்கை மருத்துவம்), உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி: 8th, B.Sc, Diploma ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்டு 20க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
கடையநல்லூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. குறைந்தபட்ச கல்லித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர் என்ற முகவரியிலும் 04633-290270 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது. இருப்பினும் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குற்றாலம் பகுதிகளுக்கு வருகை புரிந்து குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 இன்று ஆகஸ்ட் 8 நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்.தலைமை வகித்து பேசினார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மக்களே! ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை சென்று தரிசித்தால் மனதில் அமைதி பெருகி இன்பம் வழிபிறக்கும். இதற்காகும் பண செலவை நினைத்தாலே நம் தலையே சுத்தும். இதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்ல உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் இந்த <
தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் ? அவர்களை தொடர்பு கொள்ளும் எண்கள்.
மாவட்ட ஆட்சியர் – கமல்கிஷோர் – 04633-290548
காவல்துறை கண்காணிப்பாளர் – அரவிந்த் – 04633-290677
மாவட்ட வருவாய் அலுவலர் – ஜெயச்சந்திரன் – 04633-290546
ஊரகவளர்ச்சி திட்ட இயக்குநர் – தண்டபானி – 04633-295182
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!
சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே தென்காசி வழியாக சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை – சென்னை: ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
புளியங்குடியில் கரடி தாக்கி காயம் அடைந்த மூன்று பெண்களையும் தென்காசி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணத் தொகை வழங்கினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.