Tenkasi

News March 2, 2025

நாதக தலைவர் சீமான் இன்று தென்காசி வருகை 

image

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்.2) ஒரு நாள் சுற்று பயணமாக தென்காசிக்கு வருகிறார். தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை கண்டித்து செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும். இதற்காக முன்ஏற்பாடுகள் கட்சி நிர்வாகிகள் செய்து அவரை உற்சாக வரவேற்க உள்ளனர். இந்நிகழ்வில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.

News March 2, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-1 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

சிற்றாறு கோட்ட நீரை பயன்படுத்துவோர் சங்கத்திற்கு அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம் சிற்றாறு வடிநில கோட்டத்தின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களில் 52 சங்கங்களுக்கு தலைவர், உறுப்பினர்களின் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அட்டவணை தென்காசி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நீர்வளத்துறை பிரிவு அலுவலகங்கள் மற்றும் VAO அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.3 மற்றும் 4-ம் தேதிகள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 1, 2025

காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் பந்தல் கால் விழா ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்டத்தின்மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் வரும் ஏப்ரல் 7ம்-தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணிக்காக நாளை நடைபெற இருந்த பந்தல் கால் நாட்டு விழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் இன்று 1-ம் தேதி அறிவித்துள்ளது.

News March 1, 2025

தென்காசி கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 43 வழிதடங்களில் புதிதாக சிற்றுந்து இயக்கிட பிப்.10 தேதி முதல் பிப் 28ஆம் தேதி வரை வட்டார போக்குவரத்து அலுவலகம் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று(பிப்.28) தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 1, 2025

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

image

தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்றும் நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெளியே செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 1, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

தென்காசி மாவட்டத்தில் நாள்தோறும் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள காவல் அதிகாரிகளை நியமனம் செய்து காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டு வருகிறார். அதன்படி இன்று ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு பொதுமக்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 28, 2025

காசிவிஸ்வநாதர் கோவில் வழக்கு ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்டம் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட தலைவர் சிவ பாலசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (28/2/2025) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் விவேக் குமார் சிங் வழக்கை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

News February 28, 2025

தென்காசி மாவட்டத்தில் மின் தடை கிடையாது!

image

தென்காசி, சாம்பவர் வடகரை, சுரண்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் நாளை(மார்ச் 1) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக வாட்ஸ்-அப் குழுக்கள் வாயிலாக தவறான தகவல் பரவி வருகிறது. இதனை நம்ப வேண்டாம். பள்ளி தேர்வுகள் முடியும் வரை மின்தடை இருக்காது என நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். SHARE IT.

News February 28, 2025

தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்பு!

image

காற்று சுழற்ச்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(பிப்.28) தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் இந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!