India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் TNPSC குரூப்-1 கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04633 213 179 -ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.*TNPSC மாணவர்களுக்கு பகிரவும்*
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பரும்பு நகர் பகுதியில், நேற்று(மார்ச் 6) பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு இறந்து கிடந்த திருநங்கையின் உடலை மீட்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அதே வீட்டில் தங்கி இருந்த 2 திருநங்கைகளை கைது செய்து அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. பிறப்புறுப்பு அறுத்ததால் மரணம் என்ற செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வரும் மார்ச் 10ஆம் தேதி தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஐடிஐ இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு தொழில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. தகவலுக்கு (04633 298088, 7603942550, 9791768403)* ஷேர் பண்ணுங்க
கோயம்புத்தூர் கற்பகம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், ஈரோடு நேரு எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன் சார்பில் குற்றாலம் சாலையில் உள்ள சௌந்தர்யா மஹாலில் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ‘பிளஸ் டூ பிறகு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்’ என மாபெரும் இலவச வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. *மாணவர்களுக்கு பகிரவும்*
கோயம்புத்தூர் கற்பகம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், ஈரோடு நேரு எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன் சார்பில் குற்றாலம் சாலையில் உள்ள சௌந்தர்யா மஹாலில் வருகிற 13-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ‘பிளஸ் டூ பிறகு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்’ என மாபெரும் இலவச வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. *மாணவர்களுக்கு பகிரவும்*
சாத்தான்குளம் அருகே அரசகுளத்தை சேர்ந்தவர் சிவாஜி கணேசன் என்ற சைலு(32). இவர் தென்காசி மாவட்டம் கடையம் அருகே, குத்தபாஞ்சான் பரும்பு பகுதியில் திருநங்கைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தானும் திருநங்கையாக மாற முயன்ற சைலு நேற்றிரவு பிறப்புறுப்பை அறுக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இன்று காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார்(37) என்பவருக்கும் அவரது மனைவி முருகேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டபோது தனது 8 மாத பெண் குழந்தைக்கு முத்துக்குமார் விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் நேற்று(மார்ச் 5) அவரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (05.03.25)புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம் போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் சிறப்பு வாய்ந்த முருகன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.626 படிக்கட்டுகளில் ஏறி முருகனை தரிசனம் செய்ய வேண்டும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறையாவது சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது ஐதீகம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் இன்று காலை நகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை அப்புறப்படுத்தும் பொழுது 7 மாத பெண் சிசு கிடந்ததைக் கண்டு காவல் துறையிடம் அளித்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் சிசு உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.