Tenkasi

News March 10, 2025

தென்காசி: இலவச போட்டித்தேர்வு பயிற்சிக்கு ரெடியா ?

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கான இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தென்காசி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வாரம் தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .

News March 10, 2025

தென்காசி: திடீர் மழை குறித்து முன்னெச்சரிக்கை கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் நாளை(11.03.2025) பரவலான கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து வானிலை ஆராய்ச்சை மையம் சார்பில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேரிடர் காலங்களில் துரித நடவடிக்கை எடுக்கும் பொருட்டு முன்னேற்பாட்டு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

News March 10, 2025

கடையம் அருகே ரயில் மோதி சிதைந்து கிடந்த உடல்!

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப்பாலம், செங்கோட்டை – நெல்லை ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக இன்று(மார்ச் 10) காலை தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? தற்கொலையா? கொலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 10, 2025

தென்காசிக்கு ஆரஞ்சு அலெர்ட் – உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்திற்கு நாளை(11.3.25) கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்படுள்ளது. ஆதலால் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகம் சார்பில் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077 & 04633-290548. இவற்றில் தொடர்பு கொண்டு மழை தொடர்பாக புகார், உதவிக்கு தெரிவிக்கலாம். உடனே பகிரவும்.

News March 10, 2025

தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.3.2025 அன்று ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கு பகிர்ந்து அலர்ட் செய்யவும்

News March 10, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *இரவில் வெளியே செல்லும் நண்பர்களுக்கு பகிரவும்*

News March 9, 2025

தென்காசி மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் பணி

image

தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான மாவட்ட அளவிலான வள பயிற்றுநருக்கான இடம் தேர்வு செய்வதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 வருட பணி செய்த அனுபவம், தனி நபர் தொடர்பு ஆகியவற்றில் திறமை உள்ளவராக இருத்தல் வேண்டும்.dpiu tsi@vahoo.com என்ற மெயில் மூலமாகவும் 18.03.2025 ஆம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 9, 2025

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கல்லூரி மாணவர் கைது

image

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் சந்திரன் மகன் செல்வம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு  ஒன்றாம் வகுப்பு படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 9, 2025

சிவகிரியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் – 4 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடையநல்லூர் அருகே உள்ள வலசையை சேர்ந்த செல்வம் (20) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து செல்வம் அவரது உறவினர்கள் காளியம்மாள் (40), முருகன் (39 )முருகன் மனைவி முத்துலட்சுமி ஆகிய நான்கு பேரை  கைது செய்தனர் .

News March 9, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!