India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘தீய சக்தியை வேறொருப்போம்’ தலைப்பில் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நாளை(மார்ச் 12) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். நயினார் நாகேந்திரன், பொன் பால கணபதி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் கோமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் தட்டச்சர், உதவி பரிசாரகர், உதவி யானைப்பாகன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் இன்று(மார்ச் 11) முதல் ஏப்.4ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று(11.3.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்படுள்ளது. ஆதலால் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகம் சார்பில் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. *1077 & 04633-290548* இவற்றில் தொடர்பு கொண்டு மழை தொடர்பான புகார், உதவிக்கு தெரிவிக்கலாம். உடனே பகிரவும்.
சங்கரன்கோவில் புதிய நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2- 20 வரை உள்ள 18 கடைகளுக்கு 12.03.2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கும் 21 -37 வரை உள்ள 16 கடைகளுக்கு 13.03.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கும் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கான இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தென்காசி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வாரம் தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தென்காசி மாவட்டத்தில் நாளை(11.03.2025) பரவலான கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து வானிலை ஆராய்ச்சை மையம் சார்பில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேரிடர் காலங்களில் துரித நடவடிக்கை எடுக்கும் பொருட்டு முன்னேற்பாட்டு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப்பாலம், செங்கோட்டை – நெல்லை ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக இன்று(மார்ச் 10) காலை தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? தற்கொலையா? கொலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திற்கு நாளை(11.3.25) கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்படுள்ளது. ஆதலால் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகம் சார்பில் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077 & 04633-290548. இவற்றில் தொடர்பு கொண்டு மழை தொடர்பாக புகார், உதவிக்கு தெரிவிக்கலாம். உடனே பகிரவும்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.3.2025 அன்று ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கு பகிர்ந்து அலர்ட் செய்யவும்
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *இரவில் வெளியே செல்லும் நண்பர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.