Tenkasi

News March 31, 2025

தென்காசி: திருமணவரம்,குழந்தை பாக்கியம் தரும் கோயில்

image

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் குமாரர் சுவாமியாக அருள் பாலித்து வருகிறார். இங்கு பிரார்த்தனை செய்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். பிரார்த்தனை செய்து வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். *ஷேர் பண்ணுங்க*

News March 31, 2025

தென்காசி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தென்காசி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

image

தென்காசி , சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கீா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48). இவர், தனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கொடுத்தாராம். அப் பெண் வாங்கிய பணத்தைச் கட்டாததால், அந்த பணத்தை மெஹ்ராஜ் செலுத்தி வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீஸாா் விசாரிகின்றனர்.

News March 30, 2025

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு 

image

நாளை (மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல்2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்ரல்5 வரை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 30, 2025

தென்காசி: கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அண்மை காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை (மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஏப்.2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்.5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 30, 2025

கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கொடிக் கம்பங்களை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டு செலவினைத் தொகை வசூலிக்கப்படும் என்றார்.

News March 30, 2025

தாட்கோ மூலம் தொழில் தொடங்க வாய்ப்பு – ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோருக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழில் பேட்டைகளில் தொழில் துவங்க வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று  தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>. ஷேர்

News March 29, 2025

தென்காசி: குடும்பத்தில் ஒற்றுமை இல்லையா?

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவிலின் துணைக் கோவில்தான் சித்திரசபை கோவில். குற்றாலநாதர் கோவிலுக்கு வடபகுதியில் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது. திருவாதிரை திருவிழாவின்போது இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்கி , குடும்பத்தினர் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

News March 29, 2025

தென்காசி: கடனை காலம் தாழ்த்தாமல் வழங்குக

image

தென்காசி மாவட்டம் கீழ கடையத்தை சேர்ந்த அன்னை இந்திரா மகளிர் சுய உதவி குழு தலைவி சீதாலட்சுமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது பாரத ஸ்டேட் வங்கியில் சுவாமித்வ திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதனைக் காலம் தாழ்த்தாமல் விரைவில் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 29, 2025

மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் காலம் நீட்டிப்பு 

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண அட்டைகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணையதளம் வாயிலாக இனி வரும் நாட்களில் வழங்க வேண்டியுள்ளதால், தென்காசி மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏற்கனவே பெற்றுள்ள LAL1620T சலுகை அட்டையினை 30-06-2025 வரை பயன்படுத்தி கட்டணமில்லா பயணச்சலுவையினை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் இன்று அறிவித்தார்.

error: Content is protected !!