India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புளியங்குடி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த சாம் கிங்ஸ்டன் சங்கரன்கோவில் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் , பணிபுரிந்த நாகராஜ் புளியங்குடி நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்ற ஆணையாளரை நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணை தலைவர் அந்தோணிசாமி, மற்றும் பத்திரம் சாகுல் ஹமீது, அனைத்து கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
▶️திருவேங்கடம் – 04636-264400
▶️சங்கரன்கோவில் – 04636-222270
▶️சிவகிரி – 04636-250223
▶️ஆலங்குளம் – 04633-270899
▶️வீரகேரளம்புதூர் – 04633-277140
▶️கடையநல்லூர் – 04633-245666
▶️செங்கோட்டை – 04633-233276
▶️தென்காசி – 04633-222262
(ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும்) *ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டம் பிரசித்தி பெற்ற உலகம்பாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை 11 மணிக்கு அன்னதானம் கூடத்தின் அருகில் உள்ள அலுவலகத்தில் திருக்கோயில் அறங்காவலர்களால் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருக்கோயில் சார்ந்த குறைகளை மனுவாக கொடுக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பாக U-19 வீரர், வீராங்கனைகளுக்கான மாவட்ட அளவிலான போட்டி 14.09.2025 அன்று தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.10.2006-க்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9940949555 என்ற எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதளத்தில் இருந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து பகிரப்பட்டுள்ளது. “சாலையில் நடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்தியை புகைப்படத்துடன் அனைவரும் புரிந்து கொள்ளும்படி பகிர்ந்துள்ளது.
தென்காசி, சுரண்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடையர்தவணை மீனாட்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மாடகண்ணு(45) என்பவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராம்ராஜ் மனைவிக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜ், நேற்று மாடகண்ணுவை வெட்டியதில் அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் சுரண்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் திட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்தலைமை வகுத்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 375 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <
தென்காசி மாவட்ட மக்களே நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
தென்காசி மாவட்ட வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சி முகமை, சமூகநலத்துறை, சிறுபான்மையினா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, மாவட்ட வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வி, நெடுஞ்சாலை, மகளிர் திட்டம், அறநிலையத்துறை உட்பட 19 துறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிய இந்த லிங்கில்<
Sorry, no posts matched your criteria.