Tenkasi

News April 4, 2025

தென்காசி: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம் 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா 19 வருடம் கழித்து வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கோவிலில் பணிகள் முடியாமல் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்று கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News April 3, 2025

தென்காசி: கேரளா அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

image

தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கேரள மாநிலம்  திருவனந்தபுரத்திற்கு கேரளா மாநில அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது இந்த பேருந்து புளியரை அருகே உள்ள ஆரியங்காவில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பொழுது பேருந்தில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, அதனை கொண்டு சென்ற அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சஜு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

News April 3, 2025

தென்காசி :தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

சங்கரன்கோவிலில்  ஏப்.5ம் தேதி காலை 10 மணிக்கு  தனியார் வேலை வாய்ப்பு முகாம் அபர்ணாதேவி மஹாலில் நடைபெற உள்ளது. இதில் 10,+2, பட்டயபடிப்பு, பட்டப்படிப்பு முடித்த 18 வயது மேலுள்ள ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பணியில் சேருவோருக்கு தங்குமிடம் இலவசம். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள  9345799425 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

விவசாயிகள் அடையாள எண் பெற கால அவகாசம் நீட்டிப்பு

image

விவசாயிகள் தங்களது நில உடமைகளை பதிவு செய்து ஆதார் போன்ற அடையாள எண் பெறுவது அவசியம். இதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாள எண் பெற வேண்டும் என தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல்-2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

தென்காசி: கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு முன்வந்து கொடி கம்பங்களை அகற்றும் எனவும்,  அதற்கான தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News April 2, 2025

பால் உற்பத்தியை அதிகரிக்க தென்காசியில் ஆலோசனை கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சங்கங்களின் முன்னேற்றத்தை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நமது மாவட்டத்தில் செயல்படும் 73 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் நாளொன்றுக்கு சராசரியாக 12,000 லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தென்காசி:சுரண்டை நகராட்சி ஒப்பந்த புள்ளி அறிவிப்பு

image

சுரண்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.3 கோடியே20 லட்சம் ஆகும். இதற்கான விண்ணப்பங்களை பெற இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி நாள்17/04/25 ஆகும். ஒப்பந்தபுள்ளி முன் கலந்தாய்வு கூட்டம் 11/04/25 அன்று நடைபெற இருக்கிறது. *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!