Tenkasi

News April 4, 2025

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்தலாம்

image

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்த நிலையில், இன்று நடந்த மறுவிசாரணையில் தமிழக அரசின் வாதத்தை ஏற்று, தடை நீக்கப்பட்டு குடமுழக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் புணராமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் ,கணபதி ஹோமம் முடிந்த நிலையில் குடமுழுக்கு நிறுத்துவது ஏற்கத்தக்கல்ல என தமிழக அரசு விளக்கம்.

News April 4, 2025

கும்பாபிஷேதிற்கு தடை – மீண்டும் விசாரணை

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மனுக்கள் இன்று  (ஏப்ரல் 4) மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு 70-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்குமா? நடக்காதா? என பக்தர்கள் மத்தியில் பெரும் ஏக்கத்தை உண்டாக்கியுள்ளது.

News April 4, 2025

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

இன்று (ஏப்ரல்4)  நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட  என 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.(ஏப்.4) முதல் ஏப்.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

தென்காசி : +2 தேர்ச்சியா? காத்திருக்கும் வேலைவாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீட்டு சுகாதார உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு<<>> கிளிக் செய்து 22-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

வரி செலுத்தாத வீடுகளுக்கு சீல்

image

குற்றாலம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வசூலிக்கப்பட்டு இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதி நாள் 31.03.2025 ஆகும் 31.03.2025 வரை காத்திருந்தும் சொத்து வரித்தொகை ரூபாய் 6,20,626/-நிலுவை இருந்ததில் சொத்து வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News April 4, 2025

கும்பாபிஷேதிற்கு தடை – மீண்டும் விசாரணை

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மனுக்கள் இன்று  (ஏப்ரல் 4) மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு 70-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்குமா? நடக்காதா? என பக்தர்கள் மத்தியில் பெரும் ஏக்கத்தை உண்டாக்கியுள்ளது.

News April 4, 2025

தென்காசி: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம் 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா 19 வருடம் கழித்து வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கோவிலில் பணிகள் முடியாமல் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்று கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News April 3, 2025

தென்காசி: கேரளா அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

image

தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கேரள மாநிலம்  திருவனந்தபுரத்திற்கு கேரளா மாநில அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது இந்த பேருந்து புளியரை அருகே உள்ள ஆரியங்காவில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பொழுது பேருந்தில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, அதனை கொண்டு சென்ற அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சஜு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!