Tenkasi

News April 5, 2025

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்துள்ளார் தொடர்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சுரண்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2025

திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்காணல்

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் இன்று  ஒன்றிய, நகர, பேரூர் பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுக நிர்வாகி எம்.பி.ராஜவர்மன் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 5, 2025

தென்காசி மாவட்டத்தில் மின்தடை நீக்கும் சேவை மையம்

image

தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP), மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 94458 59032, 94458 59033, 94458 59034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் செல்போன் எண் 94987 94987 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு புகார் தகவல்களை தெரிவிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 4, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்ரல் 4 இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்தலாம்

image

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்த நிலையில், இன்று நடந்த மறுவிசாரணையில் தமிழக அரசின் வாதத்தை ஏற்று, தடை நீக்கப்பட்டு குடமுழக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் புணராமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் ,கணபதி ஹோமம் முடிந்த நிலையில் குடமுழுக்கு நிறுத்துவது ஏற்கத்தக்கல்ல என தமிழக அரசு விளக்கம்.

News April 4, 2025

கும்பாபிஷேதிற்கு தடை – மீண்டும் விசாரணை

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மனுக்கள் இன்று  (ஏப்ரல் 4) மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு 70-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்குமா? நடக்காதா? என பக்தர்கள் மத்தியில் பெரும் ஏக்கத்தை உண்டாக்கியுள்ளது.

News April 4, 2025

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

இன்று (ஏப்ரல்4)  நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட  என 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.(ஏப்.4) முதல் ஏப்.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

தென்காசி : +2 தேர்ச்சியா? காத்திருக்கும் வேலைவாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீட்டு சுகாதார உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு<<>> கிளிக் செய்து 22-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

வரி செலுத்தாத வீடுகளுக்கு சீல்

image

குற்றாலம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வசூலிக்கப்பட்டு இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதி நாள் 31.03.2025 ஆகும் 31.03.2025 வரை காத்திருந்தும் சொத்து வரித்தொகை ரூபாய் 6,20,626/-நிலுவை இருந்ததில் சொத்து வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News April 4, 2025

கும்பாபிஷேதிற்கு தடை – மீண்டும் விசாரணை

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மனுக்கள் இன்று  (ஏப்ரல் 4) மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு 70-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்குமா? நடக்காதா? என பக்தர்கள் மத்தியில் பெரும் ஏக்கத்தை உண்டாக்கியுள்ளது.

error: Content is protected !!