Tenkasi

News September 11, 2025

தென்காசி: சொந்தவீடு கட்ட போறீங்களா??

image

தென்காசி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து அந்த பல ஆயிரம் ரூபாயை உங்க சட்டை பைல போட்க்கோங்க… வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க…

News September 11, 2025

தென்காசி மாவட்ட கவுன்சிலர்களுக்குள் போட்டி

image

தென்காசி மாவட்டம், காசி தர்மம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற நிலையில் நேற்று 7வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி முகாமில், 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கலந்து கொண்டதற்கு தன்னுடைய அதிருப்தியை 7வது வார்டு கவுன்சிலர் சமூக ஊடகத்தின் வாயிலாக தெரிவித்திருப்பது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

News September 11, 2025

தென்காசி: பிரபல கோயில்களின் வழிபாட்டு நேரம்

image

▶️சித்திரசபை – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.
▶️மதுரவாணி அம்பாள் கோயில், சாம்பவர் வடகரை – காலை 5 – 10 மணி, மாலை 5 – 8 மணி வரை.
▶️திருமலை கோவில் – காலை 6 – 1 மணி, மாலை 5 – 8:30 மணி வரை.
▶️திருக்குற்றாலநாதர் கோவில் – காலை 6 – 12 மணி, மாலை 4:30 – 8:00 மணி வரை.
▶️காசி விஸ்வநாதர் கோயில் – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.
ஷேர் பண்ணுங்க

News September 10, 2025

தென்காசி ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

image

தென்காசி மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 10, 2025

தென்காசியில் நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி

image

தென்காசி மாவட்டத்தில் முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என இப்பள்ளி தோ்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா் விருது மற்றும் சான்றிதழை வழங்கினாா். செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் பெற்றுக் கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி ஆகியோர் கலந்துகொண்டனா்.

News September 10, 2025

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

image

தென்காசி மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்க உள்ள நிலையம் நேற்று மாலை சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை 7 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் ராமநதி அணைப்பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 10 மில்லி மீட்டர், சங்கரன்கோவில் 8.50 மில்லி மீட்டர் மழை பெய்தது. கருப்பா நிதி அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் செங்கோட்டையில் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

News September 10, 2025

தென்காசி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையா?

image

தென்காசி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக தொலைபேசி எண். 04633- 295891 மற்றும் 8148230265 என்ற தொலைபேசி எண்களிலும், சுகாதாரம் தொடர்பான குறைகளை 9600212764 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். *ஷேர்

News September 10, 2025

தென்காசி: வைரலாகும் புகைப்படங்களால் பரபரப்பு

image

தென்காசி மாவட்டம், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். தற்பொழுது மழையின் காரணமாக தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து வருகின்ற கொட்டி வருகிறது. இந்நிலையில் பிரதான அருவியில் மது பிரியர் ஒருவர் மது பாட்டிலை திறந்து வைத்துக் கொண்டு அருவியில் தண்ணீர் பிடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

News September 10, 2025

தென்காசி: தீபாவளி பட்டாசு விற்பனை உரிமம் பெற அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008இன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 10.10.2025 வரை (https//www.tnesevai.tn.gov.in) இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார். *ஷேர்

News September 10, 2025

தென்காசி: நகைக்காக பெண் கொலை; அதிரடி தீர்ப்பு

image

புளியங்குடி அருகே கடந்த 2013ஆம் ஆண்டு நகைக்காக இளம் பெண்ணை வெட்டி கொலை செய்து சாக்கு முட்டையில் வைத்து வீசி சென்ற சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்ட ராஜா என்பருக்கு தென்காசி மாவட்ட உரிமை நீதிமன்ற நீதிபதி ராஜவேலு ஆயுள் தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் அரசு வழக்கறிஞர் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகினார்.

error: Content is protected !!