Tenkasi

News April 9, 2025

தென்காசி: வேலை தேடும் நபர்களுக்கு அறிய வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>> சுய விவரங்களை பதிவு செய்யலாம். வேலை தேடும் உங்கள் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 9, 2025

தென்காசி : பூச்சி கடித்து மூதாட்டி பலி

image

கடையம் அருகே மேல குத்த பாஞ்சான் பகுதியை சேர்ந்த சித்திரை வடிவு(65) என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News April 9, 2025

கதவை திறந்து தூங்காதிங்க – தென்காசி காவல்துறை விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சொந்த மாவட்டம் மக்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News April 8, 2025

தென்காசி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தென்காசி மாவட்டம் முழுவதும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாவீரர் ஜெயந்தி 10.4.2025 வியாழக்கிழமை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்கள் மேற்கண்ட தினத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைடைய ரவுடி கைது 

image

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் (52) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2025

சிவகிரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

சிவகிரி பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் தென்காசி – மதுரை சாலையில் வாகன தணிக்கை செய்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்த போது, சிவகிரி உள்ளாரை சேர்ந்த பூலித்துரை மகன் காசித்துரை என்ற கார்த்திக் காரில் சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 8, 2025

அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

image

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கு www.icds.tn.gov.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

News April 7, 2025

பைக் விபத்தில் மனைவி பலி 

image

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே காக்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி கலா(50). இருவரும் இன்று இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் சென்று கொண்டிருந்த போது எதிரே பொன் பாண்டியன் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 6, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!