India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உருவாக்கப்பட்டு, அந்த துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இத்திட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு சங்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரி நேற்று(செப்.,24) நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட உடைப்பன்குளத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜாதி மோதல் நடந்து மூன்று பேர் கொலையான எஸ் சி, எஸ்.டி வன்கொடுமை பிசிஆர் வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நெல்லை நீதிமன்றம் இன்று (செப்.24) பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மேலும் தண்டனை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது குறித்து நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தரும் புவியியல் துறை நிபுணருமான சந்திரசேகர் கூறுகையில், பூமிக்கு அடியில் நிகழும் திடீர் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் அதிக வெப்பநிலை ஏற்படும் போது பூமிக்கு அடியில் நீரோட்டம் நகன்று ஏற்படும் வறட்சி, வெயில் அதிகம் பதிவாகும் பகுதிகளில் திடீர் மழை பெய்தாலோ ஏற்படலாம் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபரில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மாநாடு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு சம்பந்தமாக கடையம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் மந்தியூர் பகுதியில் மதுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி & அம்பை, வி.கே.புரம், பாபநாசம் பகுதிகளில் நேற்று(செப்.,22) நில அதிர்வு உணரப்பட்டது. இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் இல்லாததால் இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், இந்த நில அதிர்வுக்கு கல்குவாரிகளே காரணமாக இருக்கக்கூடும் எனக்கூறி உரிய நடவடிக்கை எடுக்க இளைஞர் காங்., நிர்வாகி மாரி குமார் வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ செய்தியாளர் சந்தித்தார். அப்போது, புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும், விளை நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தார்.
கடையம், ஆழ்வார்குறிச்சி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் அச்சமடைந்தனர். குறிப்பாக வீடுகளில் உள்ள பொருட்கள் கீழே விழுந்ததாகவும் மிகப்பெரிய சத்தம் வந்து சென்றதாகவும் பொதுமக்கள் பீதியில் இருந்தனர். தகவலறிந்த தென்காசி வட்டாட்சியர் மணிகண்டன் கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றார்.
வடகரை பகுதியில் விவசாய விளை நிலங்களில் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதை முன்னிட்டு விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக இன்று மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் இன்று(செப்.,22) காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், தற்போது வரை அரசின் ‘Seismo’ இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வர பெறவில்லை. யாருக்கும் காயமோ, பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. கள அலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி ,வாகைகுளம், செட்டிகுளம் ,ஆம்பூர், சிவசைலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இன்று செப்டம்பர் 11.45 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது .அதனை அந்த பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர் .வீடுகள் லேசாக குழுங்கியதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.