Tenkasi

News October 22, 2024

தங்கத்தேர் இழுத்து வழிபட்ட ஊராட்சி தலைவர்கள்

image

தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்று நான்காவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் கீழ வீராணம் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் முன்னிலையில் இலஞ்சி திருமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

News October 22, 2024

உழைப்பதற்கு மட்டும் திமுக தொண்டனா? பரபரப்பு போஸ்டர்

image

தென்காசி நகராட்சி 12வது வார்டு செயலாளராக திமுகவை சேர்ந்த வேல்ஐயப்பன் உள்ளார். இவர், தென்காசி மேலமுத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு பதவி வழங்காமல் பாஜக & காங்., கட்சியை சேர்ந்தோருக்கு வழங்கியதாக கூறி, நகர் மன்ற தலைவரும் மாவட்ட அறங்காவல் குழு தலைவருமான சுப்பையாவை கண்டித்து ஐயப்பன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 22, 2024

குவாரிக்கு அனுமதி வழங்கினால் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

image

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் கந்தசாமி தேவர் என்பவர் நேற்று(அக்.,21) தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரிடம் மக்கள் குறைதீர் நாள் முகாமில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பாட்டா குறிச்சி பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதனை மீறி அனுமதி வழங்கப்பட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

தென்காசி மாணவி மாநில அளவில் முதலிடம்

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி இஸ்லாமியக் கல்வியில் கல்லூரியில் 2021-2023 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற தஸ்லிமா நஸ்ரின் என்ற மாணவி, TNOU பல்கலை., நடத்திய பல்கலை., தேர்வில் தமிழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். இதற்காக நேற்று மாணவி தஸ்லிமா நஸ்ரின்(அக்.21) சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமாகிய ரவியிடம் விருதினை பெற்றுக்கொண்டார். வாழ்த்து சொல்லலாமே!

News October 22, 2024

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கும் எஸ்.பி

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பாக தென்காசி சைபர் பிரிவு மற்றும் ஸ்ரீ கண்ணா கல்வி குழுமம் இணைந்து சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு மற்றும் பேரணி நிகழ்ச்சி இன்று (அக்.22) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் துவங்கி வைக்க உள்ளார். இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News October 22, 2024

சுரண்டைக்கு மதுபான கடை வேண்டாம் – தேமுதிக மனு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சுரண்டையில் இயங்கி வரும் தனியார் மதுக்கடையை மூட வலியுறுத்தி தேமுதிக சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் தேமுதிக நிர்வாகிகள் கருப்பு நிலா கணேசன் தென்காசி நகர செயலாளர், மகேந்திரன்நகர துணை செயலாளர் நயினார், ரமேஷ் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News October 21, 2024

தீபாவளிக்கு சிறப்பு ரயில் இயக்க தென்காசி எம்பி கோரிக்கை

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் இன்று (அக்.21) தென்னக இரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில்; தீபாவளி பண்டிகை முடிந்து ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

News October 21, 2024

புளியறையில் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ்

image

தென்காசி மாவட்டம் புளியறையில் கேரள மாநிலத்திற்கு அளவுக்கு அதிகமாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை கண்டித்து வரும் 23ஆம் தேதி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த சமாதான பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.21) நடந்தது. அதில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

News October 21, 2024

தென்காசி அருகே மாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை

image

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசு மாட்டை அதிகாலையில் சிறுத்தை ஒன்று அடித்து கொன்று போட்டுச் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News October 21, 2024

தென்காசி: தந்தையை கொலை செய்த மகன்; நீதிமன்றம் தீர்ப்பு

image

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவர் தனது தந்தையை 2016ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றவாளி டேவிட் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமாக ரூ.2,000 விதித்து நீதிபதி மனோஜ் குமார் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!