India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக தலைமை அறிவிப்பின்படி தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (ஜன.7) தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும், இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் திரளாக கலந்து கொள்ளும்படி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று(ஜன.6) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ), முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. இதில் கலந்து பயன்பெறலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் 2019 ஆம் ஆண்டு உதயமானது. அப்போது முதல் காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங், கிருஷ்ணராஜ், சாம்சங் சுரேஷ்குமார், சீனிவாசன் ஆகியோர் பணியாற்றிய நிலையில் தற்போது 6வது காவல்துறை கண்காணிப்பாளராக அரவிந்த் இன்று(ஜனவரி) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தென்காசி மாவட்ட காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று(06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் கடையம் காமராஜ் நகரை சேர்ந்த சிறுவனான கலைச்செல்வம் அப்பகுதியை சேர்ந்தவர்களோடு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டார். இந்த குழு நேற்று முன்தினம் நெல்லை அபிஷேகபட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது இவர்கள் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. காயமடைந்த 3 பேரையும் உடன் வந்தவர்கள் மீட்டு பாளை GH-க்கு அனுப்பி வைத்தனர். இதில் கலைச்செல்வன்
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன5,) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாளை (06.01.25)காலை 10.00மணி அளவில் அளவில் தென்காசி ஆட்சியர் அலுவலக சிறிய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிஷோர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளார்” என தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தனது சமூக வலைதளத்தின் வாயிலாக இன்று(ஜன.5) பிறந்தநாள் கொண்டாடும் திமுக எம்பி கனிமொழிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். “டெல்லியில் ஓங்கி ஒலிக்கும், தமிழகத்தின் உரிமை குரல் கனிமொழி கருணாநிதி அக்கா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளங்களில் இந்த வருடத்துக்கான மீன் பாசி மகசூல் குத்தகை ஏலம் ஜனவரி 9,10 ஆகிய தேதிகளில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்று ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கல்யாண ராமசுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கலந்து கொள்பவர்கள் ஜி.எஸ்.டி. சான்றிதழ் மற்றும் ரூ.1000 வைப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஜன.12,19,26 தேதிகளில் நெல்லையிலிருந்து பகல் 3.30 மணிக்கும், ஜன.13,20,27 தேதிகளில் தாம்பரத்திலிருந்து பகல் 3.30 மணிக்கும் இந்த ரயில் புறப்படுகிறது. நெல்லையிலிருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் தடத்தில் இயக்கப்படுகிறது. இன்று(ஜன.5) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.