Tenkasi

News January 15, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2025

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

image

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் கருத்தானுாரை சேர்ந்த பிரபல ரவுடி லெனின். போலீஸ் ஆவண பட்டியலில் உள்ள ரவுடி என்பதால் வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வருகிறாரா என விசாரிக்க பனவடலிசத்திரம் போலீஸ்காரர் மாரிராஜா(38), சென்றார். அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் லெனின், போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இதில் காயமடைந்த மாரிராஜா, சங்கரன்கோவில் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

News January 14, 2025

இளம் வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜன.14) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் http;//tenkasi.nic.in என்ற இணையதளத்தில் வரும் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News January 14, 2025

தென்காசி மாவட்ட இளைஞர்களின் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; இந்திய விமானப் படைக்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர் வாயு வீரரை தேர்வு செய்யும் பொருட்டு கணினி வகை தேர்வு வருகிற மார்ச் 22 முதல் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் வருகிற 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார். இதை பகிரவும்.

News January 12, 2025

தென்காசியில் திறனாய்வு மாதிரி தேர்வு தொடக்கம்

image

தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 ஆம் மாணவர்களுக்கு திறனாய்வு மாதிரி தேர்வு (NMMS) இன்று நடைபெற்றது. மேலும் 19.01.2025, 02.02.2025, 09.02.2025, 16.02.2025 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 to 12.30 வரை மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய 9487053753, 9442185928 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News January 12, 2025

தென்காசி தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை

image

POPSK திட்டத்தில் தென்காசி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் விரைந்து அமைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் M.C. மருது பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

News January 12, 2025

தென்காசி: ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருது பெற அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(ஜன.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முதலமைச்சரின் ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருதுக்கு https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வருகிற 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு இன்று கேட்டுக்கொண்டார்.

News January 12, 2025

தென்காசி ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார் அளிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்; இதனை அமைத்து வருகிற 25-ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் சக்தி நகர் தென்காசி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு” கேட்டுக் கொண்டார்.

News January 12, 2025

தென்காசி: ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருது பெற அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(ஜன.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முதலமைச்சரின் ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருதுக்கு https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வருகிற 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு இன்று கேட்டுக்கொண்டார்.

News January 12, 2025

தென்காசி அருகே போலீசை வெட்டிய ரவுடி

image

தென்காசி மாவட்டத்தில் புதிய எஸ்.பி அரவிந்த் பொறுப்பேற்ற நாள் முதல் குற்ற சரித்திர பதிவேடு ரௌடிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே கருத்தானுத்து பகுதியில் ரவுடி லெனினை குற்றப் பதிவேடு செய்வதற்காக போலீசார் இன்று(ஜன.12) சென்றபோது, அவர் போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பியுள்ளார். * போலீசுக்கே இப்படினா? மக்களின் பாதுகாப்பு எப்படி?

error: Content is protected !!