Tenkasi

News February 8, 2026

குற்றாலத்தில் பிப்ரவரி 10, 11 மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை

image

பாஸ்போர்ட் சேவையை விரிவுபடுத்தி தொலைதூர பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையம் அருகே பிப்ரவரி 10, 11 தேதிகளில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை அளிக்கப்படுகிறதுபயன்படுத்திக் கொள்ள மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்

News February 8, 2026

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

image

பிப்ரவரி – 2026 க்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13.02.2026 அன்று தென்காசி to குத்துக்கல் வலசை செல்லும் வழியில், உள்ள எபினெசேர் டைல்ஸ், KFC பின்புறம் நடக்க உள்ளது. ஆகையால் தென்காசி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட ஆட்கள் தேர்வுசெய்ய உள்ளனர்.

News February 8, 2026

தென்காசியில் 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

image

தென்காசி வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் பிப்.13 அன்று வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8th, டிகிரி, ITI டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 11 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் முகாமில் 545 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு 9597495097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 8, 2026

தென்காசி: Ex.கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் 5 பேர் கைது

image

சங்கரன்கோவில், Ex.கவுன்சிலர் மகன் ஜோதிமுருகனை பிப்.4ம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது . விசாரணையில் 2023ம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமலைக்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் முருகேசன், சத்தியமூர்த்தி, சோலைவேல் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருமலைக்குமாரை தேடி வருகின்றனர்.

News February 7, 2026

தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரவுண்டு பணி

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (பிப்ரவரி 7) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

தென்காசி: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

image

தென்காசி மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் IAS, IPS உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து பிப். 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். உயர் பதிவிகளில் பணியாற்ற இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE IT.

News February 7, 2026

தென்காசி: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News February 7, 2026

தென்காசி: போஸ்ட் ஆபீஸில் சூப்பர் வேலை ரெடி! தேர்வு இல்லை

image

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 7, 2026

தென்காசி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ)<> -1 <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 7, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!