Tenkasi

News January 16, 2025

தென்காசி காவல்துறையின் வித்தியாச விழிப்புணர்வு 

image

தென்காசி மாவட்ட காவல்துறை சமூக ஊடகத்தின் வாயிலாக சாலையில் பயணிக்கும் போது வளைவுகளில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை பதிவை வித்தியாசமான முறையில் விழிப்புணர்வாக பதிவு செய்துள்ளது. அறிவியல் பதிவின்படி மையவிலக்கு விசை பற்றிய விழிப்புணர்வு குறிப்பு இடம் பிடித்துள்ளது.

News January 16, 2025

தென்காசி:மது விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது

image

திருவள்ளுவர் தினத்தில் தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 16, 2025

கருப்பா நதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து, பிசான சாகுபடிக்காக இன்று(16/1/25) முதல் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ஏகே.கமல் கிஷோர் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் 9,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகிறது.

News January 16, 2025

சுரண்டையில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்!

image

பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை, கோவை, திருப்பூர் செல்ல வசதியாக சுரண்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஜன.18,19 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னைக்கு மாலை 5:00 மணி & மாலை 5:30, கோவைக்கு இரவு 7.30, 8.15 மணி திருப்பூருக்கு இரவு 7.00, & 8.00 மணி. மேலும் விவரங்களுக்கு சுரண்டை பேருந்து நிலைய தொடர்பு எண்கள் 6383939571, 9629211549

News January 16, 2025

கடையநல்லூரில் மறைந்த காவலர் உடலுக்கு அஞ்சலி

image

தென்காசி டிஎஸ்பி தமிழினியன் தலைமையில் அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க மறைந்த காவலர் சையத் அலியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரடியாக வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் ஏடிஎஸ்பி வேணுகோபால், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

News January 16, 2025

ஆலங்குளம் நகர மதிமுக செயலாளர் நியமனம்

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய நகர செயலாளராக M.V.கண்ணனை அக்கட்சியின் தலைவர் வைகோ நேற்று(ஜனவரி 15) அறிவித்தார். தொடர்ந்து, புதிய நகர செயலாளருடன் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து பயணிக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு தலைவர் வைகோ அறிவுறுத்தினார்.

News January 15, 2025

தென்காசி மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர்

image

தென்காசி மாவட்டத்தில் 15ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தென்காசி, சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி ஆகிய நான்கு உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு ரோந்து பணியில் நான்கு காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ஈடுபடுவார்கள்.அவசர உதவிகளுக்கு இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

News January 15, 2025

லாட்டரி சீட்டுகளை ரயிலில் கடத்தி வந்தவர் கைது

image

மானூர் தாலுகா தெற்கு அச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சார்ந்த சண்முகையாமகன் செந்தூர்பாண்டியன் என்பவர் இன்று  கேரளா மாநிலத்திலிருந்து  ரூ.15,000 மதிப்புள்ள தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 360 லாட்டரி சீட்டுகளை ரயிலில் வாங்கி வந்து தென்காசி ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது தென்காசி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அவரை கைது செய்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

News January 15, 2025

புளியங்குடி அருகே மதுபாட்டில்களை பதுக்கிய நபர் கைது

image

புளியங்குடி இன்ஸ்பெக்டர் சாம் சுந்தர் உத்தரவின் பேரில் எஸ்ஐ மாடசாமி காளிராஜ்,வினோத், திருப்பதி ஆகிய காவலர்கள் நெல்கட்டும் செவல் பகுதியில் இன்று (ஜன.15) ரோந்து சென்றபோது அப்பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள 273 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 15, 2025

பொங்கல் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த து. சேர்மன்

image

தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ‌மேல பாஞ்சாலங்குறிச்சியில் தேவர் சமுதாய இளைஞர் அணி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் இன்று(ஜன.14) நடைபெற்றது இப்போ போட்டியை தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் பாட்டாகுறிச்சி திமுக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!