India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாளை(செப்.13) காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
டெல்லி அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமத்தின் கீழ் சிவகங்கை காரைக்குடியில் மத்திய மின் வேதியல் ஆய்வு மையத்தில் (சிக்ரி) ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பார்வையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்று சிக்ரியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் பார்வைக்காக வைக்கப்படும் கண்காட்சியை பொது மக்கள் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கலெக்டர் அலுவலகத்தில் செப். 24 அன்று காலை 11:00 மணிக்கு சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து தொழில் முனைவோர், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர் பங்கேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசனை வழங்கலாம் என்றார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மேற்கொண்ட ஆய்வில் சில அலுவலர்களிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் அங்கன்வாடி மைய பணியாளர் ஒருவர், சமையலர் இருவர் உடனடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – II (தொகுதி- II மற்றும் தொகுதி- II A) தேர்விற்காக
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13,260 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வினை தேர்வாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் எழுதிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு உயர்வுக்குப் படி முதல் கட்ட முகாம் 13.09.2024 அன்று மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி, சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் சமுதாய அமைப்பாளர் பணியில் 2 இடங்கள் காலியாக உள்ளன. சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கு தேவகோட்டை நகராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்தவர்கள் மேலாளர், சிவகங்கை நகர்புர வாழ்வாதார மையம் (CLC) சிவகங்கை நகராட்சி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள 874 ஊராட்சிகளுக்கு 997 விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு துறைகளின் சாா்பில் 1,607 பயனாளிகளுக்கு ரூ. 34.95 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.13.14 கோடியில் நிறைவுற்ற 18 திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக, மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் விடுதி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது போன்று வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரி மாணவர்களை எந்த வேலைக்கும் பயன்படுத்தக் கூடாது. இச்செயல் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 67வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, இன்று(செப்.11) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு/இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா ஆஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.