Sivagangai

News September 16, 2024

சிவகங்கை பாசனத்திற்கு பெரியாறு அணை நீர் அவசியம்

image

சிவகங்கை மாவட்டம் ஷீல்டு கால்வாய் பாசன விவசாய சங்க தலைவர் ஆர். மாரி, “பெரியார் அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்குரிய தண்ணீரை வழங்க கோரி பொதுப்பணிதுறை செயற்பொறியாளரை தொடர்ந்து வலியுறுத்த உள்ளோம்; முழுமையாக தண்ணீர் கிடைத்தால் தான் 136 கண்மாய்கள் நிரம்பி, ஒரு போக சாகுபடி எடுக்கலாம்; மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாடின்றி கிராம மக்கள் வசிக்க முடியும்‌” என தெரிவித்தார்.

News September 16, 2024

காளையார்கோவில் அருகே பழந்தமிழர் குறியீடுகள்

image

காளையார்கோவில் அருகே குண்டாக் குடை அய்யனார் கோயில் பகுதியில் கல் பாசி, பானை ஓடு குறியீடுகளை காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கண்டறிந்தார். இதுகுறித்து அவர், “குண்டாக்குடை பகுதி பழந்தமிழர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது; அதற்கு அடையாளமாக கருப்பு, சிவப்புநிற பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், ஜாடியின் புனல், பானை ஓடு குறியீடுகள் கிடைத்தன; இங்கு தொழிற்கூடம் இருந்திருக்கலாம்” என தெரிவித்தார்.

News September 16, 2024

சிவகங்கை மாவட்டத்தில் உயர்வுக்கு படி முகாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வருகின்ற 18.09.2024 அன்று சிங்கம்புணரியிலும், 20.09.2024 அன்று காரைக்குடியிலும், உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. எனவே, மாணாக்கர்கள் இதனைக் கருத்தில் கொண்டு, தரமான கல்வியை பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

யூடியூப் சேனல்களுக்கு வரைமுறை விதிக்க வேண்டும்

image

‘செல்போன் வைத்திருக்கும் அனைவரும் செய்தியாளர்களாகிவிட்டனர்; வரைமுறையின்றி செயல்படும் யூடியூப் சேனல்களை மத்திய அரசு வரைமுறைப்படுத்த கருத்து கேட்டுள்ளது; யூடியூப் நடத்துவோருக்கும் சமுதாயக் கடமை உண்டு; உத்தராகண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; சிறு நகரங்களிலும் தனியார் எஃப்எம் ரேடியோ நடத்த அலைவரிசை வழங்கப்பட்டு வருகிறது” என சிவகங்கையில் எல்.முருகன் கூறினார்.

News September 15, 2024

சிவகங்கை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருக்கும் 1,05,002 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதிக்காக, நொடிக்கு 1130 கனஅடி நீர் திறக்கப்பத்துள்ளது. வைகை அணைக்கு நொடிக்கு 561 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், நொடிக்கு 1130 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News September 15, 2024

இளங்கலை மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி

image

சிவகங்கை மாவட்டத்தில் ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் 21 வரை வினாடி வினா போட்டி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. போட்டியானது நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ஆன்லைன் போட்டியில் மாணவர்கள் இருவர் கொண்ட குழுக்களாக பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சிய ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

இணையமைச்சர் எல்.முருகன் சிவகங்கை வருகை

image

சிவகங்கை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை ஆய்வு செய்ய மத்திய தகவல்&ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் வேல்முருகன் இன்று (செப்.15) சிவகங்கை வருகை புரிகிறார். சிவகங்கை மாவட்ட பாஜக தலைவரான மேப்பல் சக்தி அவர்களின் சொந்த ஊரான மேப்பல் கிராமத்தில் மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடித்து அமைச்சர் மேலூரில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

News September 15, 2024

சிவகங்கையில் 1,207 வழக்குகளுக்கு தீர்வு

image

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நேற்று (செப்.14) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,207 வழக்குகளுக்கு 5 கோடியே 95 லட்சத்து 36 ஆயிரத்து 534 ரூபாய்க்கு தீா்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

News September 15, 2024

டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

மிலாடிநபி தினத்தை முன்னிட்டு செப்.17 அன்று டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A, FL3AA உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் மிலாடி நபி தினத்தில் முழுவதுமாக மூடப்படும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

வைகை அணையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க ஆணை

image

பெரியாறு பாசனப்பகுதியாகிய 85,563 ஏக்கர் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் பாசன பரப்பு 19,439 ஏக்கர் என 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும்,75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிவகங்கை மாவட்ட விவசாயிகளும் பயன்பெறுவர்.

error: Content is protected !!