Sivagangai

News September 18, 2024

சிவகங்கையில் 4,600 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது யூரியா 4600 மெட்ரிக் டன், டிஏபி 988 மெட்ரிக் டன், பொட்டாஷ் 455 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2072 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 360 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது என வேளாண்மை இணை இயக்குநர்(பொ) லட்சுமி பிரபா இன்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) பரமேஸ்வரன் மற்றும் சிவகங்கை டான்பெட் மண்டல மேலாளர் ஜீவா உடனிருந்தனர்.

News September 17, 2024

விதை நேர்த்தி செய்து விதைத்து பயன்பெறலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்கள், விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்திடல் வேண்டும். பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உரச்செலவை குறைக்க விதை நேர்த்தி செய்து விதைத்து பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

காரைக்குடி புதிய ஏஎஸ்பி பொறுப்பேற்பு

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று (செப்.17) புதிய ஏ.எஸ்.பியாக அனிகேத் அஷோக் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்ற பின்னர் அவருக்கு காவல்துறையினர், நகரின் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News September 17, 2024

மின்னணு பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுப்பொருட்களை பெறலாம்

image

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு சாதன பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருள்களை வாங்கி செல்லலாம் இந்த இயந்திரங்கள் மானாமதுரை திருப்புவனம் இளையான்குடி காளையார் கோயில் கண்ணங்குடி,சிங்கம்புணரி, S புதூர், கல்லல், தேவகோட்டை சாக்கோட்டை பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. இங்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருள் வாங்கிச் செல்லலாம் வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

சிவகங்கையில் ரூ.4.5 கோடி நிதி முறைகேடு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்போருக்கு தமிழக அரசு உணவு & தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை வாங்க 2017-23ஆம் ஆண்டு வரை ரூ.4.5 கோடி நிதி வழங்கி உள்ளது. அந்த நிதியை அப்போது இருந்த தாசில்தார் துணையுடன் அலுவலர்கள் முறைகேடாக நிதியை எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆட்சியர் 3 தாசில்தார்களுக்கு குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க பரிந்துரை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

News September 17, 2024

மானாமதுரையில் ரயிலை கவிழ்க்க சதியா?

image

மானாமதுரை அருகே சூரியூர் ரயில் நிலையத்திலிருந்து பரமக்குடி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் 120 மீட்டருக்கு பொருத்தப்பட்ட தண்டவாளங்கள் நகராமல் இருக்க கிளிப்புகள் அனைத்தும் கழண்டு கிடந்தன. அவ்வழியே ரோந்து சென்ற தண்டவாள பராமரிப்பாளர் செந்தில்குமார் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மர்ம நபர்கள் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 17, 2024

மானாமதுரை: செப்.25ல் அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்

image

மானாமதுரை – அருப்புக்கோட்டை அகல ரயில் பாதையில் முதல்முறையாக செப்.25ஆம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. செப்.25ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் 121 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2024

முதல்வர் கோப்பை போட்டி; தேவகோட்டை பள்ளி வெற்றி

image

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் வெங்கடாசலம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

News September 16, 2024

உள்ளக குழு (IC) அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்

image

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு (IC) அமைக்காத அரசு அலுவலகம், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகம், தனியார நிறுவனங்கள் மீது ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.மேலும், குழு அமைத்த விபரத்தினை dswosvg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

மூன்று மாவட்டத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு

image

பெரியாறு அணையில் இருந்து நேற்று திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் பாசன பயன்பெறும். மேலும், குறுகிய கால பயிர்களை நடவு செய்து தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து அதிக மகசூல் பெற நீர்வளத் துறையுடன் ஒத்துழைக்குமாறு ந.அன்புச்செழியன் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்

error: Content is protected !!