India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட வட்டங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று (அக்.10) காளையார்கோவில் செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் கத்தப்பட்டு ஊராட்சியில் சில சமுதாயத்திற்கு பொது மயானம் இடமில்லாமல் இருந்தது. கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனிடம் கோரிக்கை வைத்தனர். தற்பொழுது பொது மயானத்திற்கு அரசு இடம் ஒதுக்கியது. இதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கண்ணனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்
சாக்கோட்டை அருகே உள்ள பெரியகோட்டை கருத்தாண்டி குடியிருப்பை சேர்ந்தவர் செல்லையா(58).இவரது இரண்டாவது மனைவி கருப்பாயி. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு(அக்.07)மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா, கருப்பாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அவரை சாக்கோட்டை போலீசார் நேற்று (அக்.08)கைது செய்தனர்.
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து, சான்றுடன் முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.60,000, மூன்றாம் பரிசு ரூ.40,000 வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்.
மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவில் சந்திப்பு பகுதியில் மானாமதுரை காவல்துறையினர் அவ்வழியாக வந்த டாட்டா சுமோ வாகனத்தை சோதனை மேற்கொண்ட பொழுது அந்த வாகனத்தில் 25 மூடைகளில் சுமார் 625 கிலோ மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தியை (29) கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.
சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 1ஆம் தேதி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் ராமகிருஷ்ணனிடம் ரூ.3.28 லட்சம், பீரோவில் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.3,250 கைப்பற்றப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூக்கன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் ராமகிருஷ்ணன் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், வர்ணம் தீட்டப்படாத பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. வர்ணம் தீட்டிய பானைகளில் ஒரே ஒரு பானையை தவிர மற்ற பானைகளை பண்டைய கால மக்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர்.வர்ணம் தீட்டிய பானைகளின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருப்புவனத்தில் தேங்காய் விலை உச்சத்தில் உள்ளது. சிறிய காய் ரூ.30,பெரிய காய் ரூ.50 – ரூ.60 க்கு விற்கப்படுகிறது. குடோன் வியாபாரிகள் விவசாயிகளிடம் சில மாதங்களுக்கு முன்பு ரூ.6 க்கு வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரூ.14 – ரூ.15 க்கு விவசாயிகளிடம் வாங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவிலிருந்து தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் இங்கு விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் https://oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு academy@editn.in என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (அக்.6) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்கள் தமிழிலேயே TN-ALERT என்ற செயலியின் வாயிலாக அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இச்சேவைகளை பயன்படுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுரைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று (அக்.6) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.