Sivagangai

News October 15, 2024

சிவகங்கை மாவட்டம் பேரிடர் கால அவசர எண் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பேரிடர் மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்ணை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று(அக்.15) வெளியிட்டுள்ளார். கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077 மற்றும் 04575-246233 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்

News October 15, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

சிவகங்கைமாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 15, 2024

சிவகங்கை மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இப்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News October 14, 2024

மாவட்டத்தில் 13 வீடுகள் மழையின் காரணமாக சேதம்

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக இன்று (அக்-14) காரைக்குடியில் 2 வீடுகளும், சிவகங்கையில் 6 வீடுகளும், திருப்புவனத்தில் 2 வீடுகளும், சிங்கம்புணரியில் 1 வீடும், திருப்பத்தூரில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக காரைக்குடி,திருப்பத்தூர், சிங்கம்புணரி, சிவகங்கை வட்டாட்சியர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

image

சிவகங்கை மாவட்டம்வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வரும் 18.10.2024 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் <>-1<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

தேசிய பேரிடர் மீட்பு குழு சிவகங்கைக்கு வருகை

image

சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், சிங்கம்புணரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கடந்த 16 ஆண்டிற்கு முன் ஏற்பட்ட சேதம், இம்முறையும் நேரிடாமல் இருக்க, மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுவை இன்று சிவகங்கைக்கு அனுப்பியுள்ளது.

News October 14, 2024

சிவகங்கை கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறியதாவது;சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் புகாா் தெரிவிக்கவும், வழக்குப் பதிவு செய்யவும், உதவி தொடா்பான முறையீடுகளை உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18002021989 அல்லது 14566-இல் அரசு விடுமுறை நாள் தவிா்த்து, அலுவலக வேலை நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

News October 13, 2024

சிவகங்கையில் 16 ஆண்டுக்கு பின் நிகழ்ந்த சம்பவம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்வதால் 16 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதால் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் செந்துறை, நத்தம் மலைப்பகுதி களில் உற்பத்தியாகும் பாலாறும், உப்பாறும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இணைந்து பாலாறு என்ற பெயரில் திருப்பத்தூர் கண்மாயை அடைகிறது.

News October 13, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 102 மி.மீ மழைப்பதிவு – தகவல்

image

சிவகங்கை பகுதியில் 17 மி.மீ மழைப்பதிவும், மானாமதுரை பகுதியில் 7 மி.மீட்டரும், காரைக்குடி 5.20 மி.மீட்டரும், தேவகோட்டை பகுதியில் 57.60 மி.மீட்டரும், காளையார் கோவில் பகுதியில் 15.40 மி.மீட்டரும் சராசரியாக மாவட்டம் முழுவதும் 11.36 மி.மீ மழைப் பதிவும் அதிகபட்சமாக 102.20 மி.மீ மழைப்பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2024

சிவகங்கை: பள்ளிகளில் வினாடி வினா போட்டி

image

சிவகங்கை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியுள்ளதாவது; சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான இலக்கிய மன்றம் தமிழ், ஆங்கிலம் மற்றும் வினாடி வினா போட்டிகளை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!