India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க மாநாடு நடத்தப்படுகிறது. இதில், கலந்துகொள்ள முனைவர் சேவற்கொடியோன் 9443004322 மற்றும் சிவகங்கை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோரை தொடர் கொள்ளலாம்.
வரும் அக்.24 அன்று திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கவுரவிக்கப்படவுள்ளது. கலந்து கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக டூ வீலரில் செல்வதற்கு அனுமதியில்லை. மேலும் சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஓன் போர்டு நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் நாளை காலை 8.30 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்புவனம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பால்வண்டியினை மறைத்து சோதனை செய்தபோது, அதில் 96 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும், பால்வண்டியையும் பறிமுதல் செய்து திருப்புவனத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் முனியசாமியை திருப்புவனம் போலீசார் கைது செய்து இன்று விசாரித்து வருகின்றனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் காரைக்குடி வட்டத்தில் அக்.22 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 04.30 மணி முதல் 06.00 மணி வரை பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் காரைக்குடி பி.எல்.பி மஹாலில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், தமிழகத்தில் அரசின் கொள்கையும், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கக்கூடிய கொள்கையும் இரு மொழித் திட்டம் தான். இதனை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சிந்தனை இருக்கின்றதோ அதற்கு நேர்மறையான கருத்து தெரிவிப்பவர் தான் தமிழக கவர்னர் மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் இருக்கிறது என்பதே தவறு என்று கூறினார்.
காரைக்குடி எம்.பி.கார்த்திக் சிதம்பரம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரங்களை தூய்மையாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ‘தூய்மை நகர இன்டர்ன்ஷிப் நிகழ்வு காரைக்குடியில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சி பெற தூய்மை நகர ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா ஜலாலின் 9809936618 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 223-வது குரு பூஜையினை முன்னிட்டு, 24ஆம் தேதி அன்று காலை 10 00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை தர உள்ளால். இதில், நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
தேவகோட்டை ராம்நகர் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 10 மணிக்கு தேவகோட்டை தாலுகா சதுரங்க கழகம் &காசி ஸ்ரீ நாகராஜன் கல்வி அறக்கட்டளை, கீரணி சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. குறிப்பாக இப்போதைக்கு வயது வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலம் ஒன்றில் பெட்ரோல் பங்க் அருகே சிங்கம் நடமாடுவதாக வீடியோ ஒன்று பரவியது. தற்போது இந்த வீடியோவை சிங்கப்புணரியை சேர்ந்த சிலர் எடிட் செய்து சிங்கப்புணரியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடமாடுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதை வதந்தி என அறியாத பலரும் அதை பகிர்ந்து வருவதுடன், பெண்கள், சிறுவர்கள் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.