Sivagangai

News November 12, 2024

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் IIT,IIM,IIIT,NIT, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச்சேர்ந்த (BC,MBC,DNC)வகுப்பைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் . https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News November 12, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

சிவகங்கை மாவட்டத்தில் பட்டயக்கணக்காளர் – இடைநிலை, நிறுவன செயலாளர் – இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை ஆகிய போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச்சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று(நவ.12) தெரிவித்துள்ளார். (பகிரவும்*SHARE)

News November 12, 2024

பஸ்சில் முதியவர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த கண்டக்டர்

image

திருப்பத்தூர் தெற்குப்பைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(75). இவர் நேற்று(நவ.11) கீழவளவிலிருந்து திருப்பத்தூர் செல்ல மதுரை – தஞ்சாவூர் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். அவர் வைத்திருந்த ரூ.20,000 பணத்தினை மறந்து பஸ்சில் வைத்து விட்டு இறங்கி விட்டார். நேற்று(நவ.11) இரவு 7:00 மணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், எஸ்.ஐ.செல்வபிரபு, போக்குவரத்து மேலாளர் சுரேஷ் முன்னிலையில் கண்டக்டர் முதியவரிடம் பணத்தை ஒப்படைத்தார்.

News November 12, 2024

தென்னைக்கு காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

image

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது; மாவட்ட அளவில் 8,360 எக்டேரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.2024- 2025ம் ஆண்டு தென்னை காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள் தென்னை மரங்களை இயற்கை பேரிடர், பூச்சி, நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெற ஏதுவாக தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மாநில அரசு மானியத்துடன், தென்னை பயிர் காப்பீடு திட்டம் மூலம் தற்போது பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.

News November 12, 2024

பெண்ணை வெட்டியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

image

இளையான்குடி அருகேயுள்ள வழக்காணி கிராமத்தைச் சோர்ந்தவர் மகாதேவன்(64). இவருக்கும் இவரது உறவினரான நாகமீனாளுக்கும்(57) இடையே சொத்து தகராறு இருந்தது. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி நடந்த தகராறில் நாகமீனாளை மகாதேவன் அரிவாளால் வெட்டினார். இந்த வழக்கில் மகாதேவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை நேற்று(நவ.11) தீர்ப்பளித்தது.

News November 12, 2024

விதைப்பண்ணை அமைக்க மானியம் -உதவி இயக்குனர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் மானியத்துடன் விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என விதை உரிமச்சான்று உதவி இயக்குனர் சி.சக்திகணேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைக்க தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்று நிலை நெல் விதைகளை வட்டார விரிவாக்க மையங்களில் பெறலாம்; விதைகளை வாங்கும்போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும; அதற்கான மானியமும் வழங்கப்படும்”.

News November 11, 2024

கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்த பெண்

image

இளையான்குடி அருகே உள்ள அயன்குறிச்சியை சேர்ந்த தனுஷ்கோடி மனைவி கனகலட்சுமி (51) கட்டிட வேலை பார்த்து விட்டு (நவ – 11) இன்று காளையார்கோவில் விஐபி நகரில் இருந்து கடைக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஒட்டி வந்தவர் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2024

பதிவின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல் 

image

சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள், போதை மறுவாழ்வு மையம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான, மாற்றுத்திறனாளிகளுக்கான போன்ற இல்லங்கள், பெண்கள் குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகிய அனைத்து இல்லங்கள் விடுதிகளும் உடனடியாக (நவ-30)-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

சிவகங்கையில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

image

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு & வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2வது அல்லது 3ம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகின்ற (நவ.15) (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தகவல்.

News November 11, 2024

சிவகங்கை மாவட்ட திட்டங்களை தெரிந்துகொள்ள Whatsapp channel

image

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட திட்டங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ ஆட்சியர் அலுவலக Whatsapp channel-ஐ பின்தொடர வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்றைய தினம் (நவ.11) தெரிவித்துள்ளார். *பகிரவும்* SHARE*

error: Content is protected !!