India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்துாரில் ஒரு வீட்டில், திமிங்கல எச்சம் பதுக்கி உள்ளதாக, எஸ்.பி., ஸ்ரேயா குப்தாவிற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு, திருப்பத்துார் டவுன், முத்துக்குமார், 43, வீட்டில் சோதனை நடத்தினர். அதில், 2 கோடி ரூபாய் மதிப்பில், 2 கிலோ திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர்.எச்சத்தை கடத்தி பதுக்கி வைத்தத திருப்பத்துார் சத்தியநாராயணன், 22, உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கால பதார்த்தங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்பவர்கள், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, தரமான முறையில் உணவுப் பொருட்களை நுகர்வோர்களுக்கு வழங்கிட வேண்டும்.இது தொடர்பான உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் நேற்று (அக்.2) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்திய அளவில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வண்ணம் அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் தயார்படுத்திடும் வகையில், வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் அருப்புக்கோட்டை தீர்த்தக்கரையை சேர்ந்தவர் ராமலட்சுமி(65)இவரது மகன் சிவக்குமார். திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மது குடித்து விட்டு சிவக்குமார் தனது தாய், தந்தையை திட்டியுள்ளார். இதில் மனம் உடைந்த ராமலட்சுமி காரைக்குடியிலுள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறி இங்கு வந்து விஷம் அருந்தினார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார்
காளையார்கோயிலில் வரும் அக்.27 அன்று 223வது மருதுசகோதரர்கள் நினைவு நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்குஞ்சலி செலுத்த வருபயர்கள், முன் அனுமதி பெற்று சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்று எக்காரணம் கொண்டும் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இதில் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அடுத்த வாரம் (ஆக்.31) ஆம் தேதி தீபாவளி வருவதால் அதற்கு முதல் நாள் (ஆக்.30) புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நாளை (அக். 27)மருது பாண்டியர்கள் குருபூஜை நடைபெற உள்ள நிலையில்,மதுரையிலிருந்து சிவகங்கை,பூவந்தி வழியாக தொண்டி செல்லும் வழித்தடமானது தடை செய்யப்பட்டுள்ளது.அதற்கு மாற்றாக மதுரை,மேலூர் இடையமேலூர்,சிவகங்கை, மேலூர் பைபாஸ்,ஒக்கூர் நாட்டரசன் கோட்டை,கண்டுப்பட்டி வெற்றியூர்,ஒட்டாணம் வழியாக திருவேகம்பத்தூர், தொண்டி செல்ல வேண்டுமென மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை விழா 30.10.2024 அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகின்ற 30.10.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பழைய சருகணி ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரை முன்விரோதம் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு தேவகோட்டையைச் சேர்ந்த முருகன், கண்ணதாசன் ஆகியோர் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்ததில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.11.2024 காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப்பிரதிகளில் உரிய இணைப்புகளுடன் வருகின்ற 29.10.2024 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.