Sivagangai

News November 17, 2024

பயிர் காப்பீடு திட்டத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் பிரிமியம் செலுத்த கடைசி நாள் நவ.15 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார். காப்பீடு புதுப்பிக்காத அல்லது பதியாத விவசாயிகள் விரைந்து பதிவு செய்ய வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

image

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் நவ.19 அன்று சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள், சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, ஆலோசனை, கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் கூட்டம் மேற்கொள்ளவுள்ளார் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

124 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காரைக்குடி போலீசார்

image

காரைக்குடி: காரைக்குடியில் 124 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட இருவர், அந்தமான் தப்பிய நிலையில் காரைக்குடி போலீசார் இருவரை கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட, விஜயவாடாவைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்ததோடு ஒரு கார், பைக் மற்றும் 5 அலைபேசி மற்றும் 124 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதற்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என விசாரித்து வருகின்றனர்.

News November 17, 2024

சிவகங்கையில் கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் இன்று(நவ.17) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மக்கள் தங்களது அன்றாட பணிகளை இதற்கு தகுந்தாற் போல் முன்னேற்பாடு செய்து கொள்ளவும்.

News November 17, 2024

சிவகங்கை ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியதாவது: போதைப்பொருள்களை பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், சிவகங்கையில் வரும்(நவ.17) அன்று காலை 5.30 மணிக்கு மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News November 17, 2024

வாக்காளர் முகாமில் திருத்தம் மேற்கொள்ள 2ம் நாள்

image

தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. சிவகங்கை மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலா

News November 16, 2024

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 23ல் கிராம சபை கூட்டம்

image

அரசின் பல்வேறு திட்டங்களை கிராமஅளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்பை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினமான நவ.1 இல் நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம் வரும் 23ஆம் தேதியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (நவ.16) தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

சிவகங்கையில் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டி

image

சிவகங்கையில் டிச.14ஆம் தேதி மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டி (Mararthon) நடைபெறவுள்ளது. பள்ளி / கல்லுாரிகளில் 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News November 16, 2024

சிவகங்கை மாவட்ட எஸ்பி செய்தியாளர்களுக்கு வாழ்த்து

image

தேசிய செய்தியாளர்கள் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட எஸ்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உண்மையை எப்போதும் உயர்த்திக் கொள்ளும் தங்கள் அர்ப்பணிப்பு,பொதுநலனைப் பாதுகாக்கும் மீடியாவின் செயற்பாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றது என்றும் அரசு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்தும், பொறுப்புணர்வுடனான செய்தியாளர்களாக திகழும் தங்களின் பணி பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

கூட்டுறவுத்துறை மூலம் 1,388,87 கோடி கடன் வழங்கல்

image

சிவகங்கையில் நேற்று (நவ.15) நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பெரியகருப்பன்கூட்டுறவுத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி வழங்க நிர்ணயிக்கப்பட்டதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1,388,87 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்டத்தில் 87,828 பேருக்கு 530.15 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!