India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய்களில் மீன்பாசி குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார். கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர், சிவகங்கை – 630561 என்ற முகவரியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை நேற்று (அக்.28) வழங்கினார். அறிவியல் அறிஞர் பட்டமும், 93 பேருக்கு முனைவர் பட்டமும், பல்வேறு துறைகளில் பயின்ற 42 ஆயிரத்து 433 மாணவ மாணவியருக்கு பட்டமும் வழங்கப்பட்டன. இதில் 277 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்கவில்லை.
வரும் 30ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின் மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு தேவர் குருபூஜை விழாவிற்கு செல்வதால் கீழடியில் இருந்து மானாமதுரை எல்லை வரையில் உள்ள நான்கு வழிச்சாலைகள் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம் பதிவு சான்று பெற்றிருத்தல் வேண்டும், நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி வாங்கும் போது சில்வர் பாத்திரங்களில் மட்டும் வாங்க வேண்டும், நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சங்கம் மற்றும் சிவகங்கை மாவட்டம் பாம்கோ தலைமை அலுவலகத்தில் 190 ரூபாய்க்கு தீபாவளி சிறப்பு காம்போ விற்பனையை மண்டல இணைப்பதிவாளர் இன்று (அக்-28) துவக்கி வைத்தார். உடன் பாம்கோ துணைப்பதிவாளர்/செயலாட்சியர், கூட்டுறவு சார்பதிவாளர்/நிர்வாக அலுவலர், பொதுமேலாளர் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (அக்.28) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தாட்கோ சார்பில் ரூ.1,25,000 மதிப்பீட்டில் மாடு வளர்க்க மானியத் தொகைக்கான ஆணையும், ரூ.8,77,033 மதிப்பீட்டில் டூரிஸ்ட் வாகனத்திற்கான மானியத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம் பதிவு சான்று பெற்றிருத்தல் வேண்டும், நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி வாங்கும் போது சில்வர் பாத்திரங்களில் மட்டும் வாங்க வேண்டும், நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளினால் உள்நாட்டு இன மீன்களை அழிக்கும் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகை மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியது. ஆகையால் இதனை தடை செய்வதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நேற்று (அக்டோபர் 27) மருது பாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெற்ற நிலையில், காளையார்கோவில் மறவமங்கலம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்ற இளைஞர் ஆரவாரமாக ஆடி வந்து மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு முன்பு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மேற்படி அன்புராஜ் மாரடைப்பால் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.