Sivagangai

News November 19, 2024

சிவங்கை: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். *பகிரவும்*

News November 19, 2024

 Gpay வில் லட்சம் பெற்ற VAO பணிநீக்கம் – ஆட்சியர் உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தைச்சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் வீட்டுக்கு பட்டா வாங்கி தருவதாக அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் வி.ஏ.ஓ ராக்கு என்பவர் ரூ.3000 Gpay வாங்கிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 19, 2024

சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கு விருது

image

சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. குழந்தைகள் தினத்தன்று(நவ.14) சிறந்த பள்ளிக்கான கேடயம், பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கரங்களில் விருதினை வழங்கி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று(நவ.19) வாழ்த்து பெற்றனர்.

News November 19, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சிவகங்கை மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.

News November 18, 2024

நவ.25 வரை நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சி

image

சிவகங்கையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்தும் 39-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் குணசேகரன் திறந்து வைத்தார்.

News November 18, 2024

சக ஊழியருக்காக நிதி திரட்டிய காவலர்கள்; எஸ்.பி பாராட்டு

image

சிவகங்கை மாவட்ட குற்றப்பதிவேடு கூடத்தில் சிவகங்கையைச் சோ்ந்த பி.முத்துக்கிருஷ்ணன்(37) பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 8.6.2024 அன்று பணியிலிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, இவருடன் கடந்த 2009இல் காவல் துறையில் பணியில் சேர்ந்த சக காவலா்கள் ஒருங்கிணைந்து ரூ.24,48,893 நிதியாகத் திரட்டி நவ.17 முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் கொடுத்தனர். சிவகங்கை எஸ்.பி காவலர்களை பாராட்டினார்.

News November 18, 2024

சிவகங்கை தேர்வு முகவர்களுக்கான செய்தி 

image

டி என்பிசி நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள்) இன்று (நவ.18), நாளை (நவ.19) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை, மதியம் என்று மொத்தம் 2 அமர்வுகளால் நடைபெற உள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் காலையில் 8.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்குள் வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 18, 2024

கலவரத்தில் இறந்த துணைசிறை அலுவலருக்கு மரியாதை 

image

சென்னை மத்திய சிறைச்சாலையில் துணை சிறை அலுவலராக பணியில் இருந்த ஜெயக்குமார் அங்கு ஏற்பட்ட கலவரத்தினால் 17.11.1994 கைதிகளால் தாக்கப்பட்டு, உயிருடன் எரித்து கொல்லப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சிவகங்கையில் குடும்பத்தினரால் நினைவு சதுக்கம் நிறுவப்பட்ட நிலையில் நேற்று சிவகங்கையில் அவரது உருவப் படத்திற்கு சிவகங்கை கிளைச்சிறை கண்காணிப்பாளர் பாலமுருகன் உட்பட பல சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

News November 18, 2024

சிவகங்கை: பள்ளி விடுமுறையை தலைமையாசிரியர் அறிவிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று(நவ.18) பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த தகவலை சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ளார். மழையின் காரணமாக விடுமுறை அளிப்பதை அந்த பள்ளியின் தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஆதலால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடமே விடுமுறை குறித்து கேட்டறியலாம்.

பகிரலாம்

News November 18, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் இன்று(நவ.18) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும். *பகிரவும்*

error: Content is protected !!