Sivagangai

News November 6, 2024

சிவகங்கை உழவர் சந்தையில் விலை நிலவரம்

image

சிவகங்கை உழவர் சந்தையில் இன்று (நவ. 6) தக்காளி ரூ.32-36, பாகற்காய் ரூ. 45-52, சின்ன வெங்காயம் ரூ.56-66, பெரிய வெங்காயம் ரூ.58-68, மிளகாய் ரூ.38, கத்தரி ரூ.48, வெண்டை ரூ.44, முருங்கை ரூ.60-70, புடலை ரூ.30-36, சுரைக்காய் ரூ.22-26, அவரை ரூ.62-82, பீர்க்கங்காய் ரூ.42-46 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News November 6, 2024

ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 6, 2024

இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

image

சிவகங்கை அருகே தீபாவளியன்று கீழவாணியங்குடியில் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 7 பேரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அதே தீபாவளியன்று களத்தூர் சிங்கம் மனைவி லட்சுமியும் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (நவ 5) இரு கொலைகளிலும் தொடர்புடைய கீழக்குளத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் முத்துராமலிங்கத்தை தனிப்படையினர் கைது செய்தனர்.

News November 5, 2024

சிவகங்கையில் கடனுதவிகள் பெற அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள், தகுதிகளின் அடிப்படையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04567-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

சிவகங்கையில் 64 ஆண்டு கிணறு உள்வாங்கியதால் மக்கள் பீதி

image

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா அம்மாபட்டினம் கிராம நுழைவு வாயிலில் 64 ஆண்டுக்கு முன் சமுதாய கிணறு தோண்டப்பட்டு, 5 அடி உயரத்திற்கு கருங்கற்களால் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. நேற்று மதியம் 2:30 மணிக்கு இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் திடீரென அதிர்வு ஏற்பட்டு தடுப்புச் சுவர் கிணற்றிற்குள் உள்வாங்கியது. அதைத் தொடர்ந்து கிணற்றின் சுற்றுச்சுவரும் உள்வாங்கியதால், கிராம மக்கள் பீதி அடைந்தனர்.

News November 4, 2024

சிவகங்கை கொலை குற்றவாளியின் மனு

image

நாட்டாகுடியில் அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை வெட்டியவர் அதே பகுதியைச் சேர்ந்த குண்டுமணி என கூறப்படுகிறது. அதிமுக கிளைச்செயலாளரை வெட்டி கொலை செய்துவிட்டு தனது வீட்டிற்கு தண்ணீர் குழாயை சரி செய்து தருமாறு ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். கொலை குற்றவாளியான குண்டுமணி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 4, 2024

சிவகங்கை கொலை வழக்கு குற்றவாளி கைது

image

சிவகங்கை நாட்டாகுடி கிராமத்தில் அதிமுக கிளைச் செயலாளர் கணேசன் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீசார் குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த குண்டுமணி (25) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. 

News November 4, 2024

சிவகங்கையில் மிதந்து வந்த 2 சடலங்கள்

image

சிவகங்கை, சாலைகிராமம் அருகே வெள்ளாரேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் மிதந்துள்ளது. அதேபோன்று,  திருப்புவனம் அருகே வன்னிக்கோட்டை கிராமத்தில் உள்ள வைகையாற்றில் இருந்து பிரமனூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் நேற்று இரவு இறந்து சுமார் 3 நாட்களான ஆண் சடலம் ஆற்றில் அடித்து மிதந்து வந்துள்ளது. இதுகுறித்து அந்தந்தப் பகுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 4, 2024

அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை

image

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் வசித்து வந்தவர் கணேசன், இன்று காலை நாட்டங்குடியில் உள்ள தனது பெட்டிக்கடையை திறக்க வந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டி கொலை செய்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 4, 2024

திருப்புவனம் பகுதியில் கூடு கட்டும் பறவைகள்

image

திருப்புவனம் வட்டாரத்தில் பிரமனூர், மேலவெள்ளூர், இலந்தைக்குளம், கீழடி, பசியாபுரம், ஏனாதி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் தண்ணீர் நிரம்பிய வண்ணம் உள்ளது.எனவே வெள்ளை கொக்கு, கருப்பு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களில் தற்போது கூடு கட்டி வருகின்றன.

error: Content is protected !!