Sivagangai

News December 5, 2024

 சிவகங்கையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

image

ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், நிவாரணப் பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் நேற்று இரவு  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அனுப்பி வைத்தார்.  உடன் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வானதி உட்பட அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News December 5, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

News December 5, 2024

புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் விவரங்கள்

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்குவதற்கான கருவி(ம) புதிய மின் மோட்டார் பம்பு செட்டு கருவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகின்றது. இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் 9080230845 என்ற எண்ணிலும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், சாக்கோட்டை, எஸ்.புதூர் திருப்பத்தூர் 944222 5856 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

News December 5, 2024

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

image

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள்/படைப்பணியாற்றுவோர் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் வருகின்ற 07.12.2024 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்றால் அபராதம் – மாவட்ட நிர்வாகம்

image

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, “குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News December 4, 2024

சிவகங்கை மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

image

சிவகங்கை மாவட்டத்தில், பருவமழை மற்றும் காலநிலை மாறுபாடுகளால், காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் அதிக உடல்வலி, சளியுடன் கூடிய இருமல், வயிற்றுவலி, சோர்வு, வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் காரணமாக உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு, நோய் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

ஒக்கூரில் மக்கள் தொடர்பு முகாம் -ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை வட்டம், ஒக்கூர் உள்வட்டம், சாலூர் கிராமத்தில் வருகின்ற 11.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா ஆஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

கிசான் கிரெடிட் கார்டு திட்ட முகாம்; ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்ட முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது. இதன்படி டிச.5 சிங்கம்புணரி, எஸ்.புதூர், டிச – 7 திருப்புவனம், டிச-10 மானாமதுரை, டிச-12 தேவகோட்டை, கண்ணங்குடி, டிச.17 சாக்கோட்டை, கல்லல், டிச-19 திருப்பத்தூர், டிச.21 சிவகங்கை காளையார் கோவிலில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

விவசாயிகள் பம்புசெட் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல்துறை வாயிலாக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய மின் மோட்டார் பம்புசெட் வாங்க அதிகப்பட்சமாக ரூ.15,000/- மானியம் வழங்க ரூ.13.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற அந்தந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2024 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!