India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதகுபட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த மாணவி சினேகா (20), அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் 2 ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் கல்லூரி தேர்வை சரியாக எழுதவில்லை என பெற்றோர்களிடம் புலம்பியுள்ளார். பெற்றோர் அவரை சமாதானம் செய்த நிலையில், பிப்.28 அன்று எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இவரை மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மானாமதுரை: ரயில் எண் 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர். திண்டுக்கல் தண்டவாள பாதையில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மார்ச் -04 முதல் மார்ச்-29 ந் தேதி வரை வழக்கமான திண்டுக்கல் பாதையில் செல்லாமல், மாற்று பாதையாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்கள் வழியாக நின்று செல்லும். இந்த சேவையை சிவகங்கை மாவட்ட பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நேற்று (மார்ச் – 02) சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். உடன் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக ஆதரவாளர்கள் இருந்தனர்.

காளையார் கோவில் அருகே உள்ள நல்லேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுதாகர். இவர் சாலைக்கிராமம் அருகே உள்ள குறிச்சி கிராம வயல் பகுதிகளில் ஆட்டு கிடை அமைத்துள்ளார். இவரது கிடை அருகில் உள்ள வயல்களில் திடீரென தீ பற்றியதைத் தொடர்ந்து பலத்த காற்றினால் சுதாகர் கிடை அமைத்திருந்த வயலிலும் தீ பரவியதால் அங்கு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட ஆடுகள் தீயில் கருகி பலியாகின.

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளராக (District Banking Co-ordinator) பணியாற்ற தகுதியுள்ள நபர்கள் 07.03.25 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட மக்கள் கற்றல் மையம், மாவட்ட இயக்க மேலாளர்மை அலகு, கோர்ட் வாசல் அருகில், மேலூர் ரோடு, சிவகங்கை 630561 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடிஇன்று தெரிவித்துள்ளார்

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இ<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
Sorry, no posts matched your criteria.