India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 36 பணியாளர்களுக்கு 4,247 நபர்கள் விண்ணப்பம் செய்தனர்பல்வேறு காரணங்களால் 182 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 4,065 நபர்களுக்கு நேற்றிலிருந்து 5 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மின் சம்பந்தமான மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும். அதன்படி கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தக்குடி, கண்டியூர், நாரணமங்கலம் கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடுவூர், வெங்களூர், அமராவதி புதூர், ஐடிஐ, தேவகோட்டை ரோடு, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.
அ.கருங்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் காளையார்கோவிலில் இடப்பிரச்சினையில் ஒரு தரப்புக்கு ஆதரவாக சென்றபோது அவரது செல்போனை காளையார்கோவில் எஸ் ஐ கார்த்திகேயன் தள்ளிவிட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பன்னீர்செல்வம் மனைவி வழக்கறிஞர் பூர்ணிமா மங்கையர்கரசி இன்று சிவகங்கை எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். எனவே எஸ்ஐ கார்த்திகேயனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ் பி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் உலக வாசக்டமி தினத்தை முன்னிட்டு, பெண்களின் நலத்தில் ஆண்களின் பங்கு மற்றும் ஆண்களுக்கான குடும்பநல முறை பற்றிய விழிப்புணர்வு குறித்த இருவார காலம் அனுசரிப்பு நிகழ்வுகள் (நவ.21, ஆம் தேதி முதல் டிச.4 ஆம் தேதி வரை) மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் நடைபெற்று வருகிறது எனமாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று(நவ.25) தெரிவித்துள்ளார்.
பள்ளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவியாபட்டி மற்றும் மதகுபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சசிவர்ண விநாயகர் தெருவில் உள்ள வீடுகளில் நகை மற்றும் பணம் திருடு போன நிலையில் போலீசார் 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இந்நிலையில் விரைந்து செயல்பட்ட 27 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டி சான்றிதழ்களை இன்று(நவ.25) வழங்கினார்
சிவகங்கை மாவட்டம், Group II & ΠΑமுதன்மைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்மாவட்ட வேலைவாய்ப்பு [ம] தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.விருப்பம் உள்ள முதன்மை தேர்விற்கு தயாராகும் மாணாக்கர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு கலந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இ.ஆ.ப.,தகவல் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், பாதுகாக்கப்பட்டு வரும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை இன்று(நவ.25) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் அ.மேசியாதாஸ் உள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக நாளை(நவ.25) & நாளை மறுநாள்(நவ.26) சிவகங்கை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை உட்பட டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி
அபிநவ்குமார் நேற்று உத்தரவிட்டார். அதன்படி காளையார் கோயில் காவல் ஆய்வாளர் வெங்கடேசப் பெருமாள்,இளையான்குடி காவல் ஆய்வாளர் ஜோதி முருகன், குன்றக்குடி காவல் ஆய்வாளர் செல்வக்குமார்,தேவகோட்டை நகர் காவல்நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜா சாமியாா்பட்டி விலக்கு அருகே நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த கார் நிற்காமல் சென்றது. பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதில் பாலத்திலிருந்து குதித்து காலில் காயம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புதுப்பட்டி தனசேகரன் (37) என்பது தெரியவந்தது.வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.