Sivagangai

News December 4, 2024

கிசான் கிரெடிட் கார்டு திட்ட முகாம்; ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்ட முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது. இதன்படி டிச.5 சிங்கம்புணரி, எஸ்.புதூர், டிச – 7 திருப்புவனம், டிச-10 மானாமதுரை, டிச-12 தேவகோட்டை, கண்ணங்குடி, டிச.17 சாக்கோட்டை, கல்லல், டிச-19 திருப்பத்தூர், டிச.21 சிவகங்கை காளையார் கோவிலில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

விவசாயிகள் பம்புசெட் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல்துறை வாயிலாக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய மின் மோட்டார் பம்புசெட் வாங்க அதிகப்பட்சமாக ரூ.15,000/- மானியம் வழங்க ரூ.13.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற அந்தந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2024 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்

News December 3, 2024

திருப்பத்தூரில் நாளை மாடுகள் ஏலம்

image

திருப்பத்தூர் பேரூராட்சி பகுதி பொது இடங்களில் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் பேரூராட்சியின் மூலம் பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் உரிமை கோரப்படாத 4 மாடுகள் நாளை 04.12.2024 காலை 11.30 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளன. ஏல விபரத்தை அலுவலகத்தில் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம். மேலும் மாடுகளை தெருவில் அவிழ்த்து விடாமல் தங்களது வளாகத்தில் வைத்து பாதுகாக்குமாறு பேரூராட்சி அறிவுறுத்தியுள்ளது.

News December 3, 2024

இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் போட்டோ கேட்ட எஸ்ஐ-க்கு மிரட்டல்

image

சிவகங்கை சேர்ந்தவர்கள் சந்தோஷ் பாபு20, சந்தோஷ் குமார் 22, ரவீந்திரன்23, சுதாகர் 26. இவர்கள் 4 பேரும் கத்தி வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதை அறிந்த நகர் எஸ்,ஐ சஜிவ் காமராஜர் காலணியில் உள்ள சந்தோஷ்பாபு வீட்டிற்க்கு சென்று விசாரித்தார்.அங்க எஸ்ஐயை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்து வாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

News December 3, 2024

அரசு அலுவலர்களுடன் அமைச்சர், ஆட்சியர் கலந்தாய்வு கூட்டம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் “உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்” கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பணி குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

News December 2, 2024

சிவகங்கையில் இன்று குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (02.12.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் 385 பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.உடன் துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News December 2, 2024

காரைக்குடி பல்லவன் ரயில் ரத்து

image

காரைக்குடியில் இருந்து தினமும் காலை 5.30 மணிக்கு பல்லவன் அதிவிரைவு புறப்பட்டு நண்பகல் 12.30 க்கு சென்னை சென்றடைவது வழக்கம். பெஞ்சால் புயல் காரணமாக நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் அதிக மழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் முழுவதும் வெள்ள நீர் மூழ்கடித்துச் செல்வதால், இன்று அதிகாலை பல்லவன் ரயில் ரத்து செய்யப்பட்டது.

News December 2, 2024

காரைக்குடி புதிய எஸ்பி-யின் சிறப்பு பேட்டி

image

சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் போலீஸ் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்துக்கள் போன்றவை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலீஸ் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.என காரைக்குடியில் புதிய துணை சூப்பிரண்டாக பதவியேற்ற பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

வாள் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய 3 பேர் மீது வழக்கு

image

சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் மணிகண்டன் பில்லூர் விளக்கு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது அஜய் (20), சிவபாலமுருகன் (19) மற்றும் பிரபாகரன் (21) ஆகிய மூன்று பேரும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக 2 அடி நீளமுள்ள வாளை கையில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்ததாக 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!