India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை அதிமுக மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு எதிராக சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஜன.02) போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில், பி.ஆர்.செந்தில்நாதனை மாற்றி புது ரத்தம் பாய்ச்சுமாறு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு கண்டனடம் தெரிவித்து கலவரத்தை தூண்டும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி உள்ளதா ஒன்றிய செயலாளர் செல்வமணி, சிவகங்கை எம்எல்ஏ உட்பட அதிமுகவினர் எஸ்பியிடம் புகார் இன்று மனு அளித்தனர்.
தேவகோட்டை வட்டம் கல்லங்குடி கிராமத்தில் வரும் 08ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று (ஜன.02) தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை: தற்போதைய நிலவரப்படி விரிவாக்கப் பகுதிகளை இணைத்தால் நகராட்சியின் வருவாய் ரூ.8 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதன்படி, சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிப் பகுதிகள், கொட்டகுடி, சூரக்குளம் , புதுக்கோட்டை ஊராட்சியில் ராகினிப்பட்டி, பையூா், இடையமேலூா் ஊராட்சியில் காந்திநகா் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வாா்டுகளாக உயா்த்த நடவடிக்கை. *ஷேர்*
சிவகங்கை: சுற்றுச்சூழல் வனம் & சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவித்துள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், நிறுவனங்களை மூடி அபராதம் விதிக்கப்படும் – ஆட்சியர்
*ஷேர்*
சிவகங்கையில் கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஜன.05ஆம் தேதி காலை 6 மணிக்கு “பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம்” நடைபெறும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3ம் பரிசாக ரூ.2,000 மற்றும் நான்கு முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (டிச.31) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை திருப்புவனம் அருகே முதுவன்திடலைச் சேர்ந்த செண்பகராஜாவின் மகன் சந்துரு 15, டூவீலரில் திருப்புவனம் வந்தார்.அரசு மருத்துவமனை எதிரே கொத்தங்குளத்தில் இருந்து மதுரை சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் பலியானார். பஸ் டிரைவர் நிலக்கோட்டை மணிகண்டனிடம் 49, இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்களை மூடி அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (டிச.30) தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி மாணாக்கர்களுக்கு வருகின்ற 04.01.2025 அன்று காலை 7 மணியளவில் அரண்மனை வாசல் பகுதியிலிருந்து மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் கொள்ளும் மாணவ / மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, நேற்று (டிச.29) 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத், சிவகங்கை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.