Sivagangai

News February 18, 2025

7 பேரை கடித்துக்குதறிய தெரு நாய் 

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தில் 13 வயது பள்ளி சிறுமி மற்றும் அதே அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்ற மூதாட்டி உட்பட 7 பேரை அப்பகுதியில் சுற்றித்திருந்த தெருநாய் ஒன்று விரட்டி கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி சிவகங்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 17, 2025

சிவகங்கை இளைஞர்களுக்கு ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை நாட்களில் அனைத்து கல்வி சான்றுகள், வேலை வாய்ப்பு, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 17, 2025

குறைதீர் கூட்டத்தில் 429 மனுக்கள் பெறப்பட்டன

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (பிப்.17) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர், மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 429 மனுக்கள் பெறப்பட்டன.

News February 17, 2025

திரிபுரா ஆளுநரை வரவேற்ற சிவகங்கை துணை ஆட்சியர்

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்த திரிபுரா ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லுவை தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் இன்று (பிப்.17) அரசு சார்பில் வரவேற்றார். உடன் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News February 17, 2025

மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை

image

மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் ஐயாசாமி (19) என்பவரை அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ஐயாசாமியை வெட்டியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை ரூ.62500 வழங்கினர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

image

சாத்தரசன் கோட்டையில் இருந்து கொன்னக்குளம் பகுதியில் உள்ள மாங்குளத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக சூரக்குளம் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் சரத்குமார் (30), காத்தலிங்கம் (31), கருணாமூர்த்தி ஆகிய மூவரும் 80 மூட்டைகளில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 16, 2025

சிவகங்கை: 12 ஆம் வகுப்பு மாணவன் கார் மோதியதில் பலி

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சாலையில் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சுதர்சனன் எதிரே வந்த கார் மோதியதில் மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த தீபக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி போலீசார் சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

News February 16, 2025

கண்ணமங்கல கண்மாயில் மீன்பிடித் திருவிழா

image

வகுத்தெழுவன்பட்டி கண்ணமங்கல கண்மாயில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் மீண்டும் நிரம்பி முழுமை பெற வருண பகவானை வேண்டும் விதமாக மழை வரம் வேண்டி நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது கண்மாய் கரையில் நின்று ஊர் பெரியவர்கள் வெள்ளை வீச அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.இதில் கெழுத்தி, கட்லா உள்பட போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

News February 15, 2025

கம்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள கணினி இயக்குபவர் (Computer Operator) பணியிடத்திற்கு முற்றிலுமாக தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் தங்களது வசிப்பிட தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மாதிரி விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து வரும் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!