Sivagangai

News January 18, 2025

மஞ்சுவிரட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு 

image

கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டு பார்க்க சென்ற சிவகங்கை மாவட்டம், கோரட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் வயது(70) மாடு முட்டியதில் வயிற்றில் காயம் ஏற்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

News January 18, 2025

சிங்கம்புணரி நகராட்சியாக மாற்றம் ஏற்படுமா?

image

சிங்கம்புணரி பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் அணைக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அறிவிக்கலாம் என்ற தகவல் வந்தது.பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்காத நிலையில் நெரிசல், இடப்பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர். சிங்கம்புணரி நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

News January 18, 2025

சிவகங்கை வருகிறார் முதல்வர்

image

முதல்வர் ஸ்டாலின் ஜன.21ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்கிறார்.அங்கு பல்கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரவு சிவகங்கை திரும்புகிறார். மறுநாள் காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியில், விடுதலை போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் உருவ சிலையை திறந்து வைத்து அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

News January 17, 2025

கண்டிப்பட்டியில் நாளை மஞ்சுவிரட்டு 

image

கூட்டுறவுத்துறை கே.ஆர்.பெரியகருப்பன் நாளை (ஜன.18) காளையார்கோயில் வட்டத்திற்குட்பட்ட கண்டிப்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியினை பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News January 17, 2025

மீன் வள உதவியாளர் பணிக்கு நேர்காணல்

image

சிவகங்கை மாவட்ட மீன் வளம், மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மீன் வள உதவியாளர் பணியிடத்துக்காக நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறி சோதனை, நோ்காணல் தோ்வு ஆகியவை நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வருகிற ஜன 28-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News January 17, 2025

பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் நாளை பெற்றுக் கொள்ளலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை பெறாத 62 ஆயிரத்து 396 கார்டுதாரர்கள் நாளை (ஜன.,18) க்குள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇம்மாவட்டத்தில் உள்ள 829 ரேஷன் கடைகளுக்கு 4 லட்சத்து 16 ஆயிரத்து 476 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை ஒதுக்கீடு செய்தது. ஜன. 13 முதல் ரேஷன் கடையில் பொருட்களை வினியோகம் செய்தனர்.

News January 16, 2025

சிவகங்கையைச் சேர்ந்த அபி சித்தர் மீண்டும் முதலிடம்

image

மதுரையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 20 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசை வென்றுள்ளார். அபி சித்தர் ஏற்கனவே 2023ம் ஆண்டில் முதலிடமும், 2024ஆம் ஆண்டு 2ம் இடமும் பிடித்தார். தற்போது 2வது முறையாக முதலிடம் பெற்று கார் பரிசை வென்றுள்ளார்.

News January 16, 2025

சிராவயல் மஞ்சுவிரட்டு – ஒருவர் பலி

image

சிராவயல் மஞ்சுவிரட்டில் அனுமதியின்றி அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டி காரைக்குடி அருகே பெரிய உஞ்சனையை சேர்ந்த சுப்பையா (41) என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார். காயமடைந்து காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

News January 16, 2025

சிராவயல் மஞ்சுவிரட்டில் நேர்ந்த சோகம்

image

சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை ஒன்று வழி தவறி கண்மாய்க்குள் விழுந்ததில் உயிரிழந்தது. காளையை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய நடுவிக்கோட்டையை சேர்ந்த தைனீஸ் ராஜா என்ற உரிமையாளரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 16, 2025

சிவகங்கை அருகே தொழில் போட்டி காரணமாக கொலை 

image

சென்னையில் இருந்து இரு வண்டிகளில் கானாடுகாத்தானுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு டூர் வந்த ஒரே டிராவல்ஸை சார்ந்த வெள்ளைப்பாண்டி என்ற டிரைவர், சாமுவேல் என்ற சக டிரைவரை தொழில் போட்டி காரணமாக நேற்று கானாடுகாத்தான் ஓட்டல் அருகே குத்தி கொலை செய்தார். தகவல் தெரிந்த செட்டிநாடு போலீஸார் வெள்ளைப்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!