India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.21) திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், ப.சிதம்பரம் எம்.பி. கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், அமைச்சர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர், சிவகங்கை எம்.பி. மற்றும் பலர் இருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் அரசனுார் அருகே இலுப்பக்குடியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று (ஜன.20) எல்லை பாதுகாப்பு படை பயிற்சிக்கு வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் வந்தனர்.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜன-25 10.00 AM to01.00 PM வரை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை,
கைப்பேசி எண் மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல். SHARE IT
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார். SHARE IT
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை, வளர்தமிழ் நூலகம் ஆகியவற்றை திறந்து வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் வருகை புரிய உள்ளார். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி சிவகங்கை, காரைக்குடியில் இன்று (ஜன.20) முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுப்பட்டி பகுதியை சேர்ந்த தீபா (39)கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு செந்தாமரை என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தீபா சண்முகநாதன் பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் கணவர் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மன உடைந்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் பொங்கல்ே தொகுப்பினை கார்டுதாரர்கள் ஜன.25 வரை பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் ஜன.18 வரை 84.86 சதவீதம் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது எஞ்சிய கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்க செய்யும் நோக்கில் ஜன.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 8 சீசன் தொடங்கி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்தது. இந்த சீசனில் சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த மண்ணின் மைந்தன் நா.முத்துக்குமரன் பங்கேற்று எல்லா டாஸ்க்குகளிலும் வெற்றி பெற்று அசத்தி வந்தார். இந்தநிலையில், இன்று நடைபெற்ற கிராண்ட் பினாலே-வில் முத்துக்குமரன் வெற்றி பெற்று பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். முத்துக்குமரன் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அதிகாலையில் குளிர் வாட்டி வருகிறது. மேலும் இரவு முதலே குளிர்ந்து காற்றுடன் பனி காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காத்திருப்பதை காண முடிகிறது.
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில் காரைக்குடிக்கு (ஜன-21)ல்வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வக் கோளாறு காரணமாக பிளக்ஸ், பேனர் அடிக்க வேண்டாம்.முதல்வர் கலந்து கொள்ளும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சித் தலைமையில் இருந்து 73 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.