India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமராக்கியைச் சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி அளித்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுரையின்படி மூதாட்டிக்கு UDID அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால் வழங்குவதற்கு ஏதுவாக அளவீடு பணிகள் இன்று (ஜன.31) மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் அன்றாடம் நடைபெறும் தினசரி நிகழ்வுகளான கோவில் பூஜை, மழை, பள்ளிக்கூடம், கோரிக்கை செய்திகள், அடிப்படை தேவைகள், வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் சம்பந்தமான செய்திகளை நமது Way2News App-ல் பதிவிட்டு தினமும் வருவாய் ஈட்டுங்கள்.. காளையார்கோவில் தாலுகா செய்தியாளர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பு. மேலும் தகவலுக்கு 9791338296 என்ற எண்ணை அனுகவும்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <
சிவகங்கையில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் சனிக்கிழமை (பிப். 1) முதல் 14 -ஆம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையினரால் கோழிக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் 2,40,000 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், கோழி வளா்ப்போா் அனைவரும் முகாம்களில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மாநகராட்சியாக மாற்றியது. இதில் சில பேரூராட்சி, ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. அதன்படி மானகிரி, தளக்காவூரை காரைக்குடி மாநகராட்சியுடன் இணைத்ததை கண்டித்து இன்று (ஜன.30) மானகிரியில் பொதுமக்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்களின் பொருளாதார பாதிப்பை தடுக்க ஆண்டுதோறும் இரு வார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெறும். அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற பிப்.1 முதல் 14ஆம் தேதி வரை இருவாரக் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்திட திட்டமிட்டு உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி BSNL அலுவலகத்தில் தொலைத் தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் நேற்று (ஜன-29) நடைபெற்றது. சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி கலந்து கொண்டனர். பொது மேலாளர் லோகநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விரைவில் கிராமப்புற பகுதிகளில் 4ஜி சேவை தொடங்கப்படும் என தெரிவித்தனர்.
திருப்புத்தூரைச் சேர்ந்தவர் வாவு சையது ரபியா. 2022ல் கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த ரசிக் முகமது, மெகர்நிஷா, முகமது நாசர், ஆமீனாமான் ஆகியோர் ரூ.1லட்சம் செலுத்தினால் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 10 மாதங்களில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை நம்பி 17 லட்சத்தை ஆன்லைன் மூலம் முகமது நாசர் கணக்கிற்கு வாவுசையது ரபியா அனுப்பியுள்ளார். பணத்தை கேட்டு தர மறுத்ததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒரு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகிற்கு (SJPU) ஒரு பெண் சமூகப் பணியாளர் உட்பட இரண்டு சமூகப் பணியாளர்கள் ஆகிய பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் முழுவதுமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்களுக்கு 04575 240166 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் மூலம் மாவட்ட ஊராட்சி தலைவர், கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள் என பல்வேறு நிலைகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி வகித்தனர்.உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்தும் ஒளிரும் விளக்கு, பதவி போர்டுகளை வாகனங்களில் வைத்து செல்வது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.