Sivagangai

News March 26, 2025

சிவகங்கைவாசிகளே இத பத்தி உங்க கருத்து?

image

ரயில் மாறி ஏறி 20 ஆண்டு காலமா சிவகங்கைல கொத்தடிமையா வாழ்ந்த ஆந்திராவைச் சேர்ந்தவர பத்தி கடந்த சில தினமா பேசிட்டு இருக்கோம்.அதுக்கப்புறமா அவர மீட்டு நிதி உதவி கொடுத்து அனுப்பியாச்சு.இதுபோன்ற கொத்தடிமை சம்பவமெல்லாம் துபாய் போன்ற அரபு நாடுகள்ல இருக்கும்ன்னு தெரியும்.ஆனா நம்ம சிவகங்கைலயே இத்தன வருஷமா ஒருத்தர் கொத்தடிமையா வாழ்ந்துட்டு வந்திருக்காரு அப்டிங்கிறது உங்களால ஏத்துக்க முடியுதா.?Comment.Share

News March 26, 2025

பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 26, 2025

பாரதிராஜா மகன் மரணம் – எம்.பி இரங்கல்

image

இயக்குனர் இமையம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மரணத்திற்கு சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனது சார்பாகவும் தனது தொகுதி மக்களின் சார்பாகவும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 26, 2025

ஆதி திராவிடர்கள் புகார் பதிவு செய்ய கட்டணமில்லா எண் வெளியீடு

image

சிவகங்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் 

News March 26, 2025

சொத்துவரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

image

காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தியது, கட்டடங்களுக்கு கூடுதலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28ஆம் தேதி கடையடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. *ஷேர்

News March 26, 2025

திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம்

image

திருப்புவனத்தில் நவீன வசதிகளின் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பேரூராட்சிக்கு DYFI திருப்புவனம் ஒன்றிய தலைவர் முத்துராஜா பலமுறை கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு திருப்புவனம்-மண்டபம் சாலையில் புல எண்16/16 இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளதாகவும், அரசு சார்பாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் பேரூராட்சி செயல் அலுவலர் பதில் தெரிவித்துள்ளார். *ஷேர்

News March 26, 2025

வெயிலின் கொடுமையால் இறந்த முதியவர் 

image

காரைக்குடி, வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(60). வீட்டை விட்டு கிளம்பி வேலைக்கு சென்றவர் தேவகோட்டையில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தார் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (கோடையில் மதியம் 12 – 3 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்கவும்)

News March 25, 2025

கோ – கோ பயிற்சி அளிக்க நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்/வீராங்கணைகளுக்கு கோ-கோ பயிற்சி அளித்திட தகுதியுடைய கோ-கோ வீரர்/வீராங்கனைகள் வருகின்ற 03.04.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நேர்முக தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

image

சிவகங்கை மாவட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு வருகின்ற 06.04.2025 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, ஆடுகள தகவல் தொடர்பு மையத்தினை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

மார்ச்.28ல் வேலை வாய்ப்பு முகாம்

image

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச்.28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!