India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்திய தொண்டரான தோழர் ஜீவா இளமை பருவத்தில் ஆசிரியராக பணியாற்ற வந்து சேர்ந்த இடம் சிவகங்கை, சிறாவயல் அருகே உள்ள மருதங்குடி.இங்கே அவர் காந்தி பெயரில் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு, 1927இல் காந்தி வருகை தந்தார்.இங்கிருந்து மதுரை செல்லும் வழியில், ஏழை விவசாயிகள் கந்தல் துணியுடன் இருப்பதை பார்த்த காந்தி தனது பகட்டான ஆடையை துறக்க முடிவு செய்தாராம். காந்தி ஜீவா நினைவாக இங்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி எப்சிபா மாநில அளவில் நடைபெற்ற திரைப்படம் திரைக்கதை விமர்சனம் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றார். பிப்.23, 28ஆம் தேதி வரை மலேசிய நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல உள்ளார். இன்று மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.
102 மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆலோசகர் பணிக்கு நாளை (பிப்.22) சிவகங்கை பழைய அரசு மருத்துவமனையில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. நேர்முக தேர்வன்று வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எழுத்து, உடற்கூறியல் முதலுதவி, நர்சு பணி, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 89259 41977ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் பழைய சந்தை திடலில் கல்லூரி மாணவர்கள் ராஷ்டிரிய சேவா யோஜனா சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். திருப்புவனம் நகர் முக்கிய பகுதியில் போதை ஒழிப்பை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். உடன் காவல் துறை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10, அதற்குக் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, +2 தேர்ச்சிக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
அரியலூர், உடையார்புரம் பகுதியில் வசந்தா என்பவரின் வீட்டில் கடந்த 14 ஆம் தேதி மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த சண்முகநாதன்(27), மணிக்காளை(29), விருதுநகரை சேர்ந்த அழகுபாண்டி(24) உள்ளிட்ட 5 பேரை மதுரை அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் 2024-25ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான https://www.tnpcb.gov.in ஏப்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்றையதினம் (20.02.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தார். அதில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார்.
இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு சென்ற அக்காள், தங்கைகளான சோபிதா, கிறிஸ்மிகா கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆசிரியை சிவமேரி மாணவிகளை கவனிக்க தவறியதாக ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்துள்ளார். மேலும் அங்கன்வாடி பணியாளர் திணேஷாஅம்மாள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலைக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இங்குள்ள திருக்கொடுங்குன்றநாதரை வழிபட்டால் துன்பம் நீங்கும் என நம்பப்படுகிறது. இங்கு பேர் இல்லா மரம், பேரா மலை, மும்முனை மதில்,மூன்று திருத்தளங்கள்,ஆறுகால் மண்டபம், உறங்காவல்லி பூஜை, உரங்கா புளி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த இடமாக இந்த மலை உள்ளது. பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதி என்பதால் பரம்பு மலை என்றும் அழைக்கப்படுகிறது.Share It.
Sorry, no posts matched your criteria.