India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இலுப்பைக்குடி, அரசனூர் கிராமங்களில் 775 ஏக்கரில் ரூ.342 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமையும் சிப்காட் தொழிற்பூங்கா மூலம் 36,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. *பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்*
சிவகங்கை மாவட்டத்தில் நாளை(பிப்.13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், காளையார்கோவில், அரசனூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், காரைக்குடி, மதகுபட்டி, சாலைகிராமம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரையும் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு பகிரவும்
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பிப்.14ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை (பிப்.11) மட்டும் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (பிப்.10) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 317 மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர விதை சிலம்ப அணி மாணவர்கள் மாஸ்டர் கலை வளர்மணி டாக்டர் பெருமாள் தலைமையில் மதுரையில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் 916 தங்க நாணயம் வென்று சாதனை படைத்துள்ளனர். இவ்விளையாட்டு போட்டியில் சிவகங்கை மாவட்டம் சார்பாக 58 பேர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதி மொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் 2018 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை செங்கல் சூளை, கரும்பு வெட்டுதல், ஆடு மேய்த்தல், சலவை, வீட்டு வேலை தொழில்களில் ஈடுபடுத்தப்பட்ட 34 குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு நிவாரண தொகை ரூ.9.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
திருப்புத்துாரை சேர்ந்த 25 வயது பெண்ணை அவரது வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக லிங்க் அனுப்பினர். அவர் தெரிவித்த வங்கி கணக்குகளில் அப்பெண் ரூ.15 லட்சத்து 12 ஆயிரம் முதலீடாக செலுத்தியுள்ளார். மேலும் கூடுதலாக பணம் செலுத்தவேண்டும் என கூறிய நிலையில் சந்தேகமடைந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சிவகங்கை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
திருப்புவனம் SBI வங்கியின் மேலாளர் அளித்த புகாரின்பேரில் மேலூரைச் சேர்ந்த ஈஸ்வரி (38) என்ற பெண் போலியான நகைகளை அடகு வைத்து 15,72,000 பணம் பெற்றதாக திருப்புவனம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மானாமதுரை SBI வங்கியில் போலி மோசடி செய்த போது அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு மூல தனமாக இருந்த மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் இன்று கைது செய்யப்பட்டார்.
எஸ்.புதுார் ஒன்றியம் குறும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பிரேம்குமார் (21). இவர் கோயம்புத்தூரில் டூவீலர் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு அங்கு பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்றதாக போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பிரேம் நேற்று குறும்பலுாரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.