Sivagangai

News February 27, 2025

புதிய அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சேந்தனேந்தல் கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு புதிய அரசு நகரப் பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காரைக்குடி மண்டல தொ.மு.ச. பொதுச் செயலா் பச்சைமால், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

News February 26, 2025

தேவகோட்டை சிவன் கோவில் வரலாறு தெரியுமா?

image

உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் நகர சிவன் கோயில் என்று அழைக்கப்படும் தேவகோட்டை சிவன் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் பிரபல கோயிலாகும். இங்குள்ள கட்டிடக்கலை மிகவும் அற்புதமானது. மேலும், காய்கறி சாய வண்ணப்பூச்சு கலைப் படைப்புகள் துடிப்பானவை. இந்தக் கோயில் சேக்கிழார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு இந்தக் கோயிலுடன் நேரடித் தொடர்பில்லை. இதற்கான வரலாறு தெரிந்தால் Comment-ல் தெரிவிக்கவும். Share.

News February 26, 2025

லாபம் பெறலாம் என்று கூறி பணம் மோசடி

image

தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த முரளியிடம் செல்போனில் பேசிய ஒருவர் தன்னை பங்குச்சந்தை ஆலோசகர் என்றும், தான் குறிப்பிடும் கம்பெனி ஷேர்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியதை நம்பி முரளி ரூ.19 லட்சத்து 41 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பணத்தைப் பெற்று கொண்ட பின்னர் அந்த நபர் எந்த தொடர்பும் கொள்ளாததால் முரளி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கின்றனர்.

News February 26, 2025

அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு முகாம்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அஞ்சலகங்களில் இந்தியா அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு முகாம் தொடங்கி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வருகின்ற பிப்-28 தேதி வரை காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறும். எனவே 18 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் இத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என கோட்ட அதிகாரி தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

பாரிவேட்டை நடத்தினால் நடவடிக்கை

image

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட வனம் மற்றும் பிற பகுதிகளில் கம்பு, வேட்டை நாய்கள் துணையுடன் பாரி வேட்டையாட தடை உள்ளது. மாவட்ட முழுவதும் இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ள நிலையில் பாரி வேட்டையில் ஈடுபடுவோர் மீது வழங்கு பதியப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வன அலுவலர் பிரபா தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் இலவச மின்சாரம் ரத்தாகும்

image

தமிழக மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இத்திட்டம் மக்கள் மீது திணிக்கும் சூழல் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அரசு அமல் படுத்தக்கூடாது  என சிவகங்கையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் உமாநாத் தெரிவித்தார்.

News February 25, 2025

சிவகங்கை மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மகா சிவராத்திரியினை முன்னிட்டு வனப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் கம்பு, வேட்டை நாய் ஆகியவற்றுடன் பாரி வேட்டையாட முற்பட்டாலும், வன உயிரினங்களை வேட்டையாடினாலும் வனச்சட்டம் 1882 மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன்படி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

சிவகங்கை புத்தக திருவிழாவில் இன்று..!

image

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று(பிப்.25) கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘நிறைவான வாழ்விற்கு வழி வகுப்பது கனிந்த மனமா? நிறைந்த பணமா?’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News February 25, 2025

குப்பை மேடாக காட்சியளிக்கும் தேவகோட்டை: நீதிபதி வேதனை

image

தேவகோட்டை வள்ளி விநாயகர் ஊரணி குப்பை மேடாக காட்சி அளிப்பதாகவும், குப்பைகளை அகற்றி ஊரணியை சுத்தம் செய்ய உத்தரவிடக் கோரியும், அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விவேக்குமார் சிங், குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதை தானே கண்கூட பார்ப்பதாகவும், கோவில் நகரங்கள் குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாகவும் கூறினார்.

News February 25, 2025

சிவகங்கை வேளாண்மை துறை எச்சரிக்கை!

image

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, பூச்சிக் கொல்லி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, தரத்தினை உறுதிப்படுத்தும் விதமாக சிவகங்கை பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் மருந்துகள் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை தரமற்ற முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வோர் மீது துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!