India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்குடி பர்மா காலனி சக்தி வீரமா காளியம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா பிப். 18 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து மது முளைப்பாரியுடன் சக்தி வீரமா காளி பவனி நடந்தது.நேற்று முன்தினம் இரவு, அரிவாள் ஏணியில் பூஜாரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். SHARE செய்யவும்
தேவகோட்டை ஆசிரியை சீதாலட்சுமி வீட்டில் பிப்., 23ல் வீட்டு கதவை உடைத்து 40 பவுன், ரூ 2.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை ஆய்வு செய்ததில் திருடியவர் காரைக்குடி சத்யா நகர் சரவணன், என தெரிந்தது. விசாரணையில் சரவணனின் தோழி காரைக்குடி கழனிவாசல் ராஜ்குமார் மனைவி செல்வி 40, செல்வியின் மகன் கார்த்திகேயன் 20, மகள் பிர்யதர்ஷினி 22, திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்தனர்
Chozhan Book Of World Records சார்பில் மாரடைப்பு நோய், பெண்கள் பாதுகாப்பு, உலக அமைதி உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி கடந்த (16/02/2025) கன்னியாகுமரியில் ஆரம்பித்து சென்னை வரை நடைபெற்றது. இதில் மானாமதுரையைச் சேர்ந்த நாகேந்திரன்-சுமதி தம்பதியரின் மகன்கள் ஹரித்திக் ராஜா, மோசிக் ராஜா சிறுவர்கள் கலந்துகொண்டு 707 கி.மீ தூரத்தை 13 நாட்களில் சென்றடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் JUNIOR STENO GRAPHER, SECRETARIAT ASSISTANT பதவிகளுக்கான காலி இடங்கள் இருக்கிறது. இந்த வேலைக்கு 12 படித்திருந்தாலே போதுமானது.தகுதியான நபர்களுக்கு 19,900 முதல் 81,100 வரை சம்பளம் கிடைக்கும். வேலை விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 18.03.2025
விண்ணப்பிக்க <
தமிழகத்தில் சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ,விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மினி பேருந்துக்கான அடையாளப்படுத்தப்பட்டுள்ள 42 வழித்தடங்கள் தவிர, மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகள் இருக்கும் பட்சத்தில், உரிய ஆவணங்களுடன் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் முன்மொழிவிற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற 10.03.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
பிரான்மலை சேக் ஒளியுள்ள தர்கா மத முக்கியத்துவம் கொண்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு வருடமும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மத சுற்றுலாப் பயணிகளும் இத்தர்காவிற்கு வருகின்றனர். இங்கு வந்து பிரார்த்திப்போரின் அனைத்து வகையான ஆசைகளும் நிறைவேற்றப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இங்கு பிரார்த்தித்ததன் மூலம் நல்லதிர்ஷ்டமும், நல்ல உடல் நலமும் கிடைக்கப் பெற்ற உண்மைக் கதைகளை அறியலாம்.Share.
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 28.02.25 காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நான்காம் ஆண்டு புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சி விழாவில் இன்றைய சிறப்பு நிகழ்வாக மாலை 7 மணி அளவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். இன்றைய விருந்தோம்பல் எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.
யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயதில் இருக்க வேண்டும். மாதம் ரூ. 15000 வழங்கப்படும். விரும்புவோர் மார்ச் 5ஆம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.