Sivagangai

News March 6, 2025

சிவகங்கை நகராட்சி ஏலம் ஒத்திவைப்பு

image

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தையில் இருந்த கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 100 கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 90 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பிப்.6,18 ஆகிய 2 தேதிகளில் ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஏலத்தில் வியபாரிகள் பங்கேற்கவில்லை என்பதால் தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

News March 6, 2025

உலக சாதனை படைத்த இரட்டையர்கள்

image

காரைக்குடி அருகேயுள்ள தனியார் பள்ளியில்  இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையர்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாதனை படைத்தனா். உலகச் சாதனை சான்றிதழ்கள், சிறப்பு பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் எஸ்.பி. குமரேசன், துணைத் தலைவர் கே. அருண்குமாா், முதல்வா் உஷாகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

News March 6, 2025

ஆந்திராவைச் சேர்ந்த 60 வயது கொத்தடிமை மீட்கப்பட்டார்

image

சிவகங்கையில் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, ஆந்திரவைச் சேர்ந்த அப்பாராவ் தேனீர் அருந்துவதற்காக ரயிலை விட்டுக் கீழே இறங்கிய போது ரயில் சென்றது. ரயிலை தவறவிட்ட அப்பாராவுக்கு உதவ முன்வந்த ஒருவர்,அவரை 20 ஆண்டாக ஆட்டு மந்தையை மேய்ப்பவராக மாற்றிவிட்டார்.தமிழக தொழிலாளர் நலத்துறை நடத்திய கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழிக்கும் நடவடிக்கையின் காரணமாக கொத்தடிமை தொழிலிலிருந்து அப்பாராவ் மீட்கப்பட்டார்.

News March 6, 2025

சிவகங்கை அருகே தூக்கிட்ட பெண் பிணம்

image

சிவகங்கை, நாட்டரசன்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் எதிரே உள்ள காட்டு பகுதியில் 40 வயது மதிக்கதக்க அடையளாளம் தெரியாத பெண் ஒருவர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் உடல் அழுகி இறந்த நிலையில் இருந்தார். நேற்று அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டரை வர வழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பெண் யார் அங்கு வந்து எப்படி இறந்தார் என விசாரிகின்றனர்.

News March 5, 2025

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் வருகின்ற (08.03.2025) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகலட்டை கோரியும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 5, 2025

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தகுதியான நபர்கள், மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சிக்கு <>இங்கு க்ளிக் செய்து <<>> பதிவு செய்யலாம் . இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல் நாடுகளில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.உடனே ஷேர் செய்யுங்கள்..

News March 5, 2025

கஷ்டமெல்லாம் நீங்கி நன்மைகள் பெருகும்

image

சிவகங்கை, திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆதி குருபகவானாக சிவபெருமான் அருள்கிறார். இங்கு சென்று வழிபட்டால் குருவருள் கைகூடும். இதுவரை நாம் பட்ட கஷ்டமெல்லாம் நீங்கி நன்மைகள் பெருகும்.குழந்தை வரம் வேண்டுவோர் மஞ்சள் துணியாலான தொட்டில் பொம்மை எடுத்து வந்து, ஆலமரத்தின் விழுதுகளில் கட்டிவிட்டு 108 முறை வலம் வந்து வழிபட்டால் வேண்டுதல் தட்டாமல் நிறைவேறும்

News March 5, 2025

ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் நிதி மோசடி

image

சிவகங்கை மாவட்டத்தில் 2017 – 2023  வரை அரசால் வழங்கப்பட்ட உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.  விசாரணையில் ரூ.9 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பதும், அதில் ரூ.5 லட்சம் திரும்பப் பெறப்பட்டதும் தெரியவந்தது. .இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரி இளையான்குடியை சேர்ந்த ராமன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 4, 2025

சிவகங்கை கேந்திர வித்யாலயாவில் 50,000 சம்பளத்தில்வேலை வாய்ப்பு

image

சிவகங்கை கேந்திரிய வித்யாலயாவில் Any Degree, B.Ed, B.Sc, BA, Diploma, M.Sc, MA, PG Diploma படித்தவர்கள் PGT, TGT, DEO, Computer Instructor பணிக்கு நேரடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் 21மற்றும் 22-ஆம் தேதி நேர்காணல்நடைபெற இருக்கிறது. தகுதியான நபர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்கும்.விண்ணப்பிக்க <>இங்கே <<>> க்ளிக் செய்யவும். மற்றவர்களுக்கு பகிரவும்

News March 4, 2025

சிவகங்கை: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற 19.03.2025 அன்று திருப்பத்தூர் வட்டத்தில் நடைபெற இருக்கிறது. வரும் 11.03.2025 முதல் 17.03.2025 வரை திருப்பத்தூர் வட்டத்திற்குட்பபட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!