Sivagangai

News March 16, 2025

சிவகங்கையில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலரால் பொது ஏலம் அறிவிப்பு

image

இளையான்குடி ஊராட்சி தாயமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட உலக எண் 73 ல் உள்ளடக்கிய பகுதியில் திருவிழா தற்காலிக கடைகள் ராட்டினங்கள் சர்க்கஸ் மற்றும் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமை குத்தகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொது ஏலத்தில் கலந்து கொள்பவர் வருமான வரி கணக்கு எண் கொடுத்து தனி அலுவலர் என ரூ.30 ஆயிரத்திற்கு டிடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்ன அறிவித்துள்ளார்

News March 15, 2025

திருக்கோஷ்டியூர் மகாமக வரலாறு

image

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார்.பிரகாரத்தில் உள்ள இந்த கிணற்றை மகாமக கிணறு என்றே அழைக்கிறார்கள்.12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமக விழாவின்போது சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.

News March 15, 2025

சிவகங்கை மாவட்டத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சிவகங்கை மாவட்டத்தில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 10 ரவுடிகள் மற்றும் 1 பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் அடங்குவர். இதில் குறிப்பிடப்படும் படியாக மேலப்பிடாவூரைச் சேர்ந்த அய்யாசாமி என்ற கல்லூரி மாணவனை தாக்கிய நபர்களில் இருவர் மீது குண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

கொலை செய்ய சதி – சுற்றி வளைத்த போலீசார்

image

காரைக்குடி உட்கோட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர், கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் காரைக்குடி பகுதியில் மார்ச்.18 அன்று நடைபெறவுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பழிவாங்கும் நோக்கில் ஒரு கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்த கூலிப்படையினரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

News March 15, 2025

சிவகங்கைக்கு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

image

சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74கோடி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து உங்க கருத்துகளை கீழே பதிவிடுங்கள் .

News March 15, 2025

பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் தேவை

image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சிக்கு  தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் செல்லும் நிலையில் இதன் உயரமும் தூரமும் பலருக்கு பெரும் தடையாக உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மலையில் ஏறுவது சிரமமான காரியமாக உள்ளது. இம்மலை உச்சிக்குச் சென்றுவர ரோப் கார் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் சுற்றுவட்டார மக்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

News March 15, 2025

மடப்புரம் கோயிலில் ரூ. 34 லட்சம் காணிக்கை

image

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.40 நாட்களுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கை செலுத்திய ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும், அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கவிதா தலைமையில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 33 லட்சத்து, 28 ஆயிரத்து 574 ரூபாய், 150 கிராம் தங்கம், 418 கிராம் வெள்ளியும், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

News March 14, 2025

அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம்-பயணிகள் அதிருப்தி

image

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிவகங்கையிலிருந்து திருக்கோஷ்டியூருக்கு செல்ல அரசு பஸ்சில் ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் நேற்று திருக்கோஷ்டியூருக்கு பஸ்சில் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரி விழா கால சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கை தான் என்றார்.

News March 13, 2025

முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மாற்றம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியாற்றுவோர் / சார்ந்தோர்களின் நலனுக்காக இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் வரும் 15.03.2025 முதல் சிவகங்கை நகர் காவல் நிலைய பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் உள்ள சத்தியமூர்த்தி தெருவில் இயங்கிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மார்ச்.13) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!