India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
சிவகங்கை மாவட்டத்தில் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் (Mining Dues clearance Certificate) கோரும் விண்ணப்பதாரர்கள் வரும் 28-ஆம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று (ஏப்.13) தெரிவித்துள்ளார். SHARE!
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற மே மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து விதமான கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் வணிகர்கள் தங்களது நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகையினை வைத்து பராமரித்திடல் வேண்டும். வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் திருநோக்கிய அழகியநாதர் திருக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டு வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம். துளசியால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே தலம் இதுவேயாகும். பிரதோஷத்தின் போது இங்குள்ள இரண்டு மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதி புதூர் அருகே அமைந்துள்ள சங்கரபதி முனீஸ்வரர் வரலாற்று சிறப்பு மிக்க தெய்வம். மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களால் பிடிக்கும் முன் அவர்கள் தங்கி இருந்த சங்கரபதி கோட்டைக்கு அருகில் இருப்பதால் சங்கரபதி முனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்த கோயில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி தேங்காய் உடைத்து செல்வது வழக்கம்.
சிவகங்கை இளையான்குடி வேலடிமடம் பஸ் ஸ்டாப்பில் உறங்கி கொண்டிருந்த மகேஸ் என்பவர் முகம் சிதை்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடன் இருந்த நவீன் என்ற இளைஞர் பலத்த வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி தப்பி ஒடி விட்டனர்.கொலை செய்யப்பட்ட மகேஷ் திருவாரூரைச் சேர்ந்த நெல் அருவடை எந்திரத்தின் உரிமையாளர் ஆவார். போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
காரைக்குடியை சேர்ந்தவர் லிங்கம். அவரது மனைவி பானுமதி மகள் விஷாலினி 9 சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சிறுமியை வளர்ப்பதில் சிரமம் என நினைத்த தம்பதியினர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு, மகளுக்கும் கொடுத்தனர்.பின் உறவினருக்கு விஷம் அருந்தியதை தெரிவித்தனர். உறவினர்கள், மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானார். லிங்கம், அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 02.07.2024 தேதிக்கு பின்னர் புதிதாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 10 அல்லது 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பதிவிற்கான விண்ணப்பத்தினை தொழிலாளர் நலத்துறையின் இணையவழி தளமான https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
உலகில் இரண்டு கைகளுடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் அதிகமான பிற்கால அணிகலன்களுடன் காணப்படுகிறது. சிற்பத்தை வடிவமைத்த காலம் ஏறக்குறைய கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது. Share It.
Sorry, no posts matched your criteria.