India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருபுவனம், தவத்தாரேந்தல், வலையப்பட்டியை சேர்ந்த முருகன் -அழகு மீனாள் தம்பதியினருக்கு வேதாஸ்ரீ என்ற குழந்தை உள்ள நிலையில் இந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனவிரத்தியில் நேற்று அழகுமீனாள் குழந்தையையும் தன்னையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டது. அழகு மீனாளை மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றபோது அவரும் இறந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளா்கள் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், வணிக நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 36 நிறுவனங்களில் இருந்து முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.
மூட்டைகளை எடை போடும் ‘பிளாட்பாா்ம் ‘ தராசுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் கட்டாயம் மறு முத்திரை இட வேண்டும் தொழிலாளா் நலன், ஆணையா் முத்து கூறினார்
சிவகங்கை மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வரும் மாணவ, மாணவியர் குழு இணைந்து புகையிலை விழிப்புணர்வு குறித்த சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியை கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் https://pencil.gov.in என்ற இணையதள முகவரியிலோ 04575-240521 அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்புவனம்:வரும் ஜூலை 6ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.அதைத் தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி தனியார் பள்ளிகளின் பேருந்துகளை சில நாட்களாக சிவகங்கை வட்டார போக்குவரத்துக் கழக மைதானத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் அவர்கள் மறு சீராய்வு செய்கிறார்.
சிவகங்கை மாவட்டநிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பணிசெய்து போது பணியிடத்தில் விபத்தினால் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகி தகவல் பெறவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), திருச்சி முத்தரசநல்லூர், தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீருந்து செய்யும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் 31.05.2024 மற்றும் 01.06.2024 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்.
ஜூன் 4 அன்று காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்ளவுள்ள 102 மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள் மற்றும் 126 நுண் பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு வாக்கு எண்ணும் முறைகள் குறித்த விரிவான பயிற்சி வகுப்புகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.