India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (ஆக.15) டாஸ்மாக் மதுபானகடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2/FL3/ FL3A/ FL3AA, உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு இளையான்குடி மழை 13.00மி.மீ லேசான மழை, திருப்புவனம் 16.80 மி.மீ மிதமான மழை, காளையார் கோவில் 6.40 மி.மீ லேசான மழை, மொத்த மழையின் அளவு 36.20 மி.மீ சாரசரி மழை அளவு 4.02 மி.மீ லேசான மழை, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி போன்ற பகுதிகளின் மழை பதிவாகவில்லை.
சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் நேற்று(ஆக.13) காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்குத்தான் காவிரி ஆணையம் உள்ளது. மேலும், தமிழக முதல்வர் யாருக்கு வேண்டுமானாலும் பதவி வழங்கலாம். யாரை வேண்டுமானாலும் அமைச்சரவையில் சேர்க்கலாம், நீக்கலாம் என்றார்.
சிவகங்கை கூட்டுறவுத்துறை சார்ந்த நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை கீழ் இயங்கும் நியாயவிலைக் கடையின் மொத்த விற்பனையாளர்களுக்கான 3 காலி பணியிடங்கள், போலி நியமன ஆணைகள் மூலம் நிரப்பப்பட்டது. இதுதொடர்பாக இணை பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சார்-பதிவாளர் சரவணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட அனைத்து தாலுகா முழுவதிலும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக-15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷாஅஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் புதுவயல், சிங்கம்புணரி, பள்ளத்தூர் வாரச்சந்தைகளில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-26, மேஜை தராசு-3, விட்டத்தராசு-15, இரும்பு எடைக்கற்கள் 44 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-16 என மொத்தம் 104 எடையளவுகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை, வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை, மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM)” வாயிலாக பெறலாம். மேலும், இச்சேவைகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 9047417828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.