India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட ஒக்கூர், கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, பிரவலூர், ஒக்கூர் புதூர் ஆகிய கிராமங்களுக்காக ஒக்கூர், கண்ணாத்தாள் திருமண மஹாலில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்புவனம் வடகரையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக்கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மோதிக்கொண்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2022-23, 2023-24 ஆம் ஆண்டுகளில் 9, 10 ஆம் வகுப்புகளில் பயின்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விபரங்கள் பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோடிக்கோட்டை சுங்கச்சாவடி மையம் உள்ளது. இந்த சுங்கச்சாவடி மையத்தை உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதில் கோடிக்கோட்டை அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 18க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மாதச் சம்பளம் முறையாக வழங்காததால் இன்று காலை வேலை புறக்கணிப்பு செய்தனர்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
திருப்பத்தூர் கண்டவராயன்பட்டி பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு, கையடக்கக் கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
சென்னை செல்லும் ரயில்கள் 27 நாட்களுக்கு செங்கல்பட்டில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதையடுத்து காரைக்குடியில் இருந்து அதிகாலை சென்னை செல்லும் பல்லவன் ரயில் ஆகஸ்ட் 18தேதி வரை செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டு, மறுமார்க்கம் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். மேலும் செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 14 வரை விழுப்புரத்தில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (ஜூன்.15) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.