India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (ஜூன்.15) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற ஜூலை 19 அன்று, காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே வேலை தேடுபவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரையில் முதன் முதலாக வில்வித்தையில் பதக்கம்..
சேலத்தில் ஆர்.ஜி.பி.ஐ நடத்திய ஓபன் நேஷனல் அளவிலான வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை மாணவர்கள் பயிற்சியாளர் கலை வளர்மணி முனைவர் பெருமாள் தலைமையில் பங்குபெற்று 16 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜிஷ்ணு முதல் இடத்தையும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நித்தின்மெஸ்ஸி முதல் இடத்தை பிடித்தனர்.
சிவகங்கை கண்டவரயான்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களோடு அமர்ந்து காலை உணவினை உட்கொண்டார். இந்தநிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளியில் துவக்கப்பட்டது.
சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வருவாய் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், திருமயம் தாலுகாவானது திருமயம் ஒன்றியம், அரிமளம் ஒன்றியம், அரிமளம் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில், அரிமளம் பகுதியை திருமயம் தாலுகாவில் இருந்து பிரித்து, புதிய தாலுகாவாக அரிமளத்தினை அறிவிக்க வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை வட்டாரத்துக்கு உள்பட்ட வாணியங்குடி, ஆலங்குளம் ஆகிய கிராமங்களுக்கு சிவகங்கை ரோஸ்நகா் எம்.ஆா்.கே. மண்டபத்திலும், சாக்கோட்டை வட்டாரத்துக்கு உள்பட்ட அரியக்குடி, அமராவதி புதூா், இலுப்பக்குடி ஆகிய கிராமங்களுக்கு அரியக்குடி சீனிவாச திருமண மண்டபத்தில் நாளை (ஜூலை 16) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் அறிவித்துள்ளார்
சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட வாணியங்குடி, ஆலங்குளம் ஆகிய கிராமங்களுக்கென சிவகங்கை ரோஸ் நகர், M.R.K மஹாலிலும், சாக்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட அரியக்குடி, அமராவதி புதூர், இலுப்பக்குடி ஆகிய கிராமங்களுக்கென அரியக்குடி, சீனிவாச திருமண மண்டபத்திலும் ஜூலை-16 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக சிவகங்கை, காரைக்குடி மற்றும் ராமநாதபுரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மேலும் காரைக்குடி ரயில் வழித்தடம் மின் மயமாக்குதல் திட்டம் தாமதமாகி வருகிறது, அதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்தோர் சிறு தொழில், வியாபாரம் செய்ய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் கடன் உதவி வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பத்தினை www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நேற்று நடைபெற்ற 10ஆம் கட்ட அகழாய்வின் போது 120 செ.மீ. ஆழத்தில் தந்தத்திலான ஆட்டக்காய் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது உருளை வடிவிலான 1.3 செ.மீ உடற்பகுதியையும், அரைக்கோளவடிவ 1.5 செ.மீ தலை பகுதியையும், தட்டையான 1.3 செ.மீ அடி பகுதியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஆட்டக்காய் கருமை நிறத்துடன் பளபளப்பாக காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.