Sivagangai

News August 18, 2024

சிவகங்கையில் ரூ.5 கோடி மதிப்பில் இருவழி சாலை

image

சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூரிலிருந்து – என்.புதுார் வரை 11 கி.மீ. நீளமுள்ள தார் ரோடு கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. தற்போது காவனூர் கண்டவராயன்பட்டி மற்றும் உடையநாதபுரம்நெ.புதூர் 2.6 கி.மீ. நீளத்திற்கு ரூ 5.5 கோடியில் இருவழிச்சாலையாக
விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் பணிகள் துவக்க உள்ளனர்.

News August 17, 2024

சிறப்பு தொழில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) காரைக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் முகாம் வருகின்ற 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறவுள்ளது. மேலும் 04565-232210 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.17) தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

சிவகங்கையில் போலீசாருக்கு பயண உணவு படி இழுபறி

image

சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேசன்களில் கிரேடு 2 முதல் தலைமை காவலர் வரை உள்ள போலீசாருக்கு வழங்க வேண்டிய பயண உணவுப்படி, கூடுதல் பணி நாள் சம்பளம் ஆகியன பல மாதங்களாக வழங்கபடவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை சிவகங்கை எஸ்பி காலதாமதமின்றி கிரேடு 2 முதல் தலைமை காவலர்கள் வரை கிடைக்க வேண்டிய படியை வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.

News August 16, 2024

சிவகஙகை அருகே ரூ.10 லட்சம் மோசடி

image

சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் (41), தனியார் கல்லூரி உடற்கல்வி பயிற்றுநர். இவரிடம்,பிரான்மலையைச் சேர்ந்த சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கடந்த ஆண்டு பெற்றுள்ளனர். ஆனால், இது வரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகாரில், நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News August 16, 2024

சிவகங்கையில் நாளை மின்தடை அறிவிப்பு

image

அ.காளாப்பூர், சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி அருகே அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பிரான்மலை, காஞ்சிரங்கால், வாணியங்குடி, வந்தவாசி, வேங்கைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பராமரிப்புபணி முடியும் வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News August 15, 2024

78 என்ற வடிவத்தில் நின்ற மாணவர்கள்

image

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின பெருவிழா இன்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் செ.சத்தியன் தலைமை வகித்தார். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் 78 என்ற வடிவத்தில் பள்ளி மாணவர்கள் நின்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.

News August 15, 2024

காரைக்குடி மாநகராட்சியுடன் இணையும் 5 ஊராட்சிகள்

image

தமிழகத்தில் காரைக்குடி உள்ளிட்ட 4 புதிய மாநகராட்சிகள் சமீபத்தில் உதயமாகின. இதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட மேயர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆக.12 இல் வழங்கினார். காரைக்குடி நகராட்சியுடன் கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகள், சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய 5 கிராம ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.

News August 14, 2024

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வரும் ஆக. 16 அன்று திருப்புவனம் வட்டாரத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கு கீழடி, பசியாபுரம், மதுரன் திருமண மண்டபத்திலும், கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்கு கோவிலூர், ஆண்டவர் திருமண மண்டபத்திலும், காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்கு கொல்லங்குடி, கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளதாக ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News August 14, 2024

கடன் உதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

சுய உதவி குழு உறுப்பினர்கள்(மற்றும்) இவர்களின் குடும்பங்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில் முனைவோர் ஆகியோர் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் மானியத்துடன் வழங்கப்படும் கடன் உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். விவரங்களூக்கு காளையார்கோவில் 8754080921, தேவகோட்டை 9786698846, மானாமதுரை 9092262696 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

சிவகங்கையில் உள்ள 445 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

error: Content is protected !!